ராணிப்பேட்டை ; நெற்பயிர்களை டிராக்டர் மூலம் உழுது அதிகாரிகள் அகற்றிய நிலையில், விவசாயிகள் கண்ணீரும், கம்பளமுமாக நின்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சோளிங்கர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒழுகூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். விவசாயியான இவர், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகிறார்.
முறையாக அந்த நிலத்திற்கு வரி கட்டி வந்த நிலையில், 5 செண்ட் இடத்தில் இருளர்களுக்கான குடியிருப்பு அமைக்க வேண்டும் என கூறி நெற்பயிர்கள் முழுவதையும் டிராக்டர் மூலம் உழுது அரசு அதிகாரிகள் அகற்றியுள்ளனர். இதனால் 5 சென்ட் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன.
விவசாய நிலத்தில் திடீரென நெற்பயிர்களை அதிகாரிகள் உழுது அகற்ற முயன்ற போது விவசாயிகள் சோகமடைந்து கண்ணீர் மல்க அதிகாரிகளிடம் முறையிட்ட போதும், அதனை கண்டு கொள்ளாமல் டிராக்டர் மூலம் உழுது அகற்றிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
விவசாயிகள் 3 மாதம் நேரம் கேட்டும் அதனை வழங்காத அதிகாரிகள் நெற்பயிரை அழிக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.