திருவாரூர் அருகே அரசு பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட ஸ்ரீவாஞ்சியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 623 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பள்ளியில் உள்ள கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து சிமெண்ட் காரை விழுந்ததால் பத்தாம் வகுப்பு படிக்கும் தயாளன் என்ற மாணவருக்கு தலையில் பலத்த படுகாயம் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து, மாணவனை நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பள்ளி ஆசிரியர்கள் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடம் சேதமடைந்து உள்ள நிலையில், வேறு கட்டிடம் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
ஏற்கனவே, தமிழக அரசு பள்ளியில் உள்ள பழுதடைந்த கட்டிடங்களை உடனடியாக இடித்து விட வேண்டும் என கூறியுள்ள நிலையில், ஸ்ரீவாஞ்சியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் படிப்பதற்கு தரமற்ற நிலையில் உள்ள கட்டிடத்தை இதுவரை இடிக்காதது ஏன்..? என பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உடனடியாக கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கையும் பெற்றோர்கள் வைத்துள்ளனர்.
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.…
This website uses cookies.