Categories: தமிழகம்

அரையாண்டு தேர்வு நடக்கும் பள்ளியில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாம்.. அலட்சியம் காட்டிய அதிகாரிகள்… அதிருப்தியில் பெற்றோர்கள்..!!

அரையாண்டு தேர்வுகள் நடக்கும் அரசுப் பள்ளியின் வளாகத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடத்தியதால் பெற்றோர்கள் அதிருப்தியடைந்தனர்.

தமிழகத்தில் தீர்க்கப்படாத பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொள்ளும் “மக்களுடன் முதல்வர்” சிறப்பு திட்டத்தை தமிழக முதல்வரால் நேற்று முன்தினம் கோவையில் துவக்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இம்முகாம் தமிழகம் முழுவதும் உள்ள பேருராட்சிகளில் நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சித்தையன்கோட்டை பேரூராட்சியில் இன்று நடந்த “மக்களுடன் முதல்வர் திட்டம்” சிறப்பு முகாமிற்கு பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பு செய்யவில்லை என்றும், பள்ளிகளில் அறையாண்டு தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், சித்தையன்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி வளாகத்தில் நடத்தியது பெற்றோர்களிடம் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது.

மூன்று அறைகள் கொண்ட பள்ளி வகுப்பறைக்குள் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பல்வேறு அரசு துறைகளின் புகார் பெறுவதற்காக அதிகாரிகள் இட நெருக்கடியான சூழலில் நாற்காலிகள் இன்றி மண் தரையில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.

பொதுமக்கள் நீண்ட வரிசையில் மனு அளிக்க காத்திருந்த நிலையில், அதிகாரிகள் அலட்சியமாக செல்போன்களை பயன்படுத்தி கொண்டும், மாற்றுத்திறனாளிகள் நீண்ட வரிசையில் மாற்றுத்திறனாளிகள் உட்பட பலரும் பலமணிநேரம் காத்திருந்து மனு அளித்துச் சென்றனர்.

அதே போல, மின் வசதி வகுப்பறை கட்டிடங்களில் இல்லாததால் பாதுகாப்பற்ற நிலையில், வகுப்பறையின் ஜன்னல் பகுதியில் குழந்தைகளுக்கும் எட்டும் வகையில் மின் இணைப்பு ஸ்விட்ச் பாக்ஸ் மற்றும் ஆபத்தான நிலையில் வயர்கள் வைக்கப்பட்டிருந்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

மேலும், பெண்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் என பலரும் கலந்துகொண்ட நிலையில், போதிய கழிவறை வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்டவைகள் ஏதும் செய்யப்படாமல், கண் துடைப்பிற்காக இந்த முகாம் நடைபெற்றுள்ளதாக மக்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. திட்டம் தொடங்கப்பட்டு இரண்டு நாட்களிலேயே, அதிகாரிகளின் அலட்சியத்தால் முறையாக முகாம் நடத்தப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

அடுத்தடுத்து நடைபெறும் மக்கள் உடன் முதல்வர் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கண்காணிக்க வேண்டும் என்றும், சித்தையன்கோட்டை பேரூராட்சியில் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

கசிந்த தகவல்..அமைச்சர் கேஎன் நேரு வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…

14 minutes ago

என்னைய படத்தில் இருந்து தூக்கிட்டா இதான் கதி- நயன்தாரா படத்திற்கு எஸ்.வி.சேகர் விட்ட சாபம்…

நெட்பிலிக்ஸில் நயன்தாரா படம்… சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி நெட்பிலிக்ஸ்…

15 minutes ago

அந்த தியாகி யார்? டாஸ்மாக் ஊழல் தொடர்பாக கவனத்தை ஈர்த்த அதிமுக எம்எல்ஏக்கள்!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…

57 minutes ago

விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி

மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…

2 days ago

உண்மையிலே அதிமுகவை பாராட்டியே ஆகணும்… திருமாவளவன் திடீர் டுவிஸ்ட்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…

2 days ago

டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…

மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…

2 days ago

This website uses cookies.