அரியலூர் – ஜெயங்கொண்டம் அருகே சத்துணவு சாப்பிட்டு வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்ட 18 மாணவர்கள் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடியை அடுத்த சோழங்குறிச்சி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது பள்ளியில் 22 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் நேற்று மதியம் வெஜிடபிள் பிரியாணியும், முட்டையும் சத்துணவு அமைப்பாளர் சபியா பேகம் மற்றும் சமையலர் விமலா ஆகியோரால் தயார் செய்து குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. பள்ளிக்கு வந்திருந்த 19 குழந்தைகள் மதிய உணவு சாப்பிட்டனர்.
மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் மாலை வீடு திரும்பியவுடன் சத்துணவு சாப்பிட்ட ஒரு குழந்தைக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து ஒருவர் பின் ஒருவராக குழந்தைகள் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்த குழந்தைகளை, அவர்களின் பெற்றோர்கள் உடனடியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சத்துணவு சாப்பிட்ட குழந்தைகளான கவின் (6) பிரதீப் (10) அர்ஜுன் (10) அஜய் (10) சாஜனா (11) சௌந்தர்யா 10 திவ்யா( 8) சுபஸ்ரீ (8) ஜெயஸ்ரீ(10) தேவகா (7) கோபிகாஸ்ரீ( 7) லட்சயா (8) சபரிவாசன்( 9) தீபா(8) பிரித்திகா (10) நாவரசன் (10) அரவிந்த் (7) கவியரசன் (9) உள்ளிட்ட 18 குழந்தைகள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 19 பேரில் ஒரு குழந்தை மட்டும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
மற்ற குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து செந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
This website uses cookies.