அரியலூர் – ஜெயங்கொண்டம் அருகே சத்துணவு சாப்பிட்டு வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்ட 18 மாணவர்கள் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடியை அடுத்த சோழங்குறிச்சி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது பள்ளியில் 22 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் நேற்று மதியம் வெஜிடபிள் பிரியாணியும், முட்டையும் சத்துணவு அமைப்பாளர் சபியா பேகம் மற்றும் சமையலர் விமலா ஆகியோரால் தயார் செய்து குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. பள்ளிக்கு வந்திருந்த 19 குழந்தைகள் மதிய உணவு சாப்பிட்டனர்.
மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் மாலை வீடு திரும்பியவுடன் சத்துணவு சாப்பிட்ட ஒரு குழந்தைக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து ஒருவர் பின் ஒருவராக குழந்தைகள் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்த குழந்தைகளை, அவர்களின் பெற்றோர்கள் உடனடியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சத்துணவு சாப்பிட்ட குழந்தைகளான கவின் (6) பிரதீப் (10) அர்ஜுன் (10) அஜய் (10) சாஜனா (11) சௌந்தர்யா 10 திவ்யா( 8) சுபஸ்ரீ (8) ஜெயஸ்ரீ(10) தேவகா (7) கோபிகாஸ்ரீ( 7) லட்சயா (8) சபரிவாசன்( 9) தீபா(8) பிரித்திகா (10) நாவரசன் (10) அரவிந்த் (7) கவியரசன் (9) உள்ளிட்ட 18 குழந்தைகள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 19 பேரில் ஒரு குழந்தை மட்டும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
மற்ற குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து செந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.