தற்போது தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உள்ளது. அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால் அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை 60ல் இருந்து 62 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.
இதுதொடர்பாக அரசின் தகவல் சரி பார்ப்பகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு ஊழியர் ஓய்வு வயதை 60ல் இருந்து 62 ஆக மாற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமை செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 15 நாட்களுக்குள் அரசாணை வெளியிட வாய்ப்பு உள்ளது என்ற தகவல் பரப்பப்படுகிறது; இது முற்றிலும் வதந்தியே.
அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை 62 ஆக மாற்ற எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. அப்படியான எந்த ஆலோசனையும் இல்லை. வதந்தியை பரப்பாதீர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தமிழக அரசின் தகவல் சரி பார்ப்பகம், ‘எக்ஸ்’ பக்கத்தில் இப்பதிவை வெளியிட்டுள்ளது.
மின் கட்டண உயர்வையும் முதலில் வதந்தி என்று தான் சொன்னார்கள்… அடுத்த இரண்டு வாரத்தில், மின் கட்டண உயர்வு என அறிவிப்பு வந்தது’ என்று குறிப்பிட்டு, மின் கட்டண உயர்வு தகவல் வதந்தி என, தகவல் சரி பார்ப்பகம், மே 10ல் வெளியிட்ட செய்தியையும் வலைதள பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.