தற்போது தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உள்ளது. அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால் அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை 60ல் இருந்து 62 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.
இதுதொடர்பாக அரசின் தகவல் சரி பார்ப்பகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு ஊழியர் ஓய்வு வயதை 60ல் இருந்து 62 ஆக மாற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமை செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 15 நாட்களுக்குள் அரசாணை வெளியிட வாய்ப்பு உள்ளது என்ற தகவல் பரப்பப்படுகிறது; இது முற்றிலும் வதந்தியே.
அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை 62 ஆக மாற்ற எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. அப்படியான எந்த ஆலோசனையும் இல்லை. வதந்தியை பரப்பாதீர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தமிழக அரசின் தகவல் சரி பார்ப்பகம், ‘எக்ஸ்’ பக்கத்தில் இப்பதிவை வெளியிட்டுள்ளது.
மின் கட்டண உயர்வையும் முதலில் வதந்தி என்று தான் சொன்னார்கள்… அடுத்த இரண்டு வாரத்தில், மின் கட்டண உயர்வு என அறிவிப்பு வந்தது’ என்று குறிப்பிட்டு, மின் கட்டண உயர்வு தகவல் வதந்தி என, தகவல் சரி பார்ப்பகம், மே 10ல் வெளியிட்ட செய்தியையும் வலைதள பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.