முதலமைச்சரை தள்ளிவிட்ட பாதுகாப்பு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதுச்சேரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வவுச்சர் ஊழியர்களுக்கும், போலீசாருக்குமிடையே வாக்கு வாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வில்லியனூர் பகுதியில் உள்ள திருக்காமேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற தேர் திருவிழாவின்போது, உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் பாதுகாப்பு அதிகாரியான ராஜசேகர் என்பவர் கூட்ட நெரிசலில் சிக்கி நிலை தடுமாறி முதல்வர் ரங்கசாமியை தள்ளிவிட்டார்.
இந்நிலையில் முதல்வர் ரங்கசாமியை தள்ளிவிட்ட பாதுகாப்பு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்ககோரி புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணிபுரியும் 20 க்கும் மேற்பட்ட வவுச்சர் ஊழியர்கள், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்ததால் இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து தடையை மீறி ஆளுநர் மாளிகை வாயில் முன்பு முற்றுகையிட முயன்றதால் போலீசாருக்கும், வவுச்சர் ஊழியர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு காணப்பட்டது. தொடர்ந்து, முற்றுகையில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் சமாதானப்படுத்தி கலையச் செய்தனர்.
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
This website uses cookies.