2025ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடியது. கூட்டம்தொடங்கும் முன்பே அதிமுகவினர் அண்ணா பல்கலை மாணவி விவகாரம் குறித்து தங்களது சட்டையில் யார் அந்த சார் என்ற பேட்ஜ் அணிந்து வந்தனர்.
இதனால் கூட்டம் தொடங்கும் முன்பே பரபரப்பை தொற்றியது. பின்னர் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் ஆர்என் ரவி பேரவைக்கு வருகை தந்தார்.
அவரை சபாநாயகர் அப்பாவு வரவேற்றார். பின்னர் கூட்டம் தொடங்கிய 3 நிமிடங்களில் ஆளுநர் ஆர்என் ரவி உரையை புறக்கணித்து பேரவை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் ஆளுநர் மாளிகை இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.அரசியலமைப்பு சட்டமும், தேசிய கீதமும், தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது.
தான் அவைக்கு வந்த போது, தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே படப்பட்டது. தேசிய கீதம் முதலில் பாடப்பட வேண்டும் என முதலமைச்சரிடம் கூறியபோது அவர் அதனை ஏற்க மறுத்ததாகவும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்த சில நிமிடங்களில் அந்த பதிவு நீக்கம் செய்யப்பட்டு பின்னர் மீண்டும் பதிவேற்றப்பட்டது.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.