Categories: தமிழகம்

திசை திருப்பும் வேலையை மட்டும் தமிழிசை செய்கிறார்… மாணவர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கிறார் : அமைச்சர் ரகுபதி!!

புதுக்கோட்டை திலகர் திடலில் நீட் விலக்கு கோரி திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் காலை முதல் நடைபெற்று வருகிறது மாலை 5 மணிக்கு உண்ணாவிரதத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முடித்து வைத்தார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, எதிர்க்கட்சிகள் எந்த பிரச்சினை எழுப்பினாலும் அதை சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தமிழக மாணவர்களை திசை திருப்புகின்ற வேலையை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்து வருகிறார். மாணவர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கின்ற செயலாக அவரது பேச்சு உள்ளது.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் தேர்வு வேண்டாம் என்று அனைத்து கட்சியும் கூறும்போது அதற்கு எதிர்மறையான கருத்து உள்ளது என்று ஒரு கருத்து உள்ளது என்று எடுத்துரைக்கும் வண்ணம் இதுபோன்று சொல்வது என்பது வெட்கக்கேடான செயல் எதுவும் கிடையாது.

தமிழர்களின் உணர்வுகளுக்கு தான் திமுக மரியாதை இருக்கிறது மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது.

இந்தி எதிர்ப்பு என்பது திமுக ரத்தத்தின் இன்றளவுக்கும் ஊறி தான் உள்ளது
இந்தியை நாங்கள் என்றைக்கும் ஆதரித்து பேசியது கிடையாது. பாராளுமன்றத்திலும் ஆங்கிலத்திலும் தமிழில்தான் நாங்கள் பேசுகிறோமே தவிர ஹிந்தியில் பேசுவது கிடையாது.

மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது வழக்கமான ஒன்றுதான் என்று மத்திய அமைச்சர் எல் முருகன் கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு வழக்கமாக ஒன்றா? நீட் தேர்வு தோல்வி நீட் தேர்வு பரீட்சை எழுத பயம் உள்ளிட்டவையில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் இது வழக்கமான ஒன்றா? நீட் தேர்வு இல்லை என்றால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வார்களா? நீட் விளக்கு மசோதா குறித்து ஜனாதிபதி இடம் இருந்தும் மத்திய அமைச்சரவையில் இருந்தும் விளக்கம் கேட்டு தான் இன்று வரை தமிழகத்திற்கு கடிதம் எழுதுகிறது. தவிர இதை நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை நீட் விலக்கு தர முடியாது என்று இதுவரை மத்திய அரசு கூறவில்லை. அப்படி இருக்கும்போது நாம் எப்படி நீதிமன்றத்திற்கு செல்ல முடியும்.

குடியரசுத் தலைவர் என்ன முடிவு எடுக்கிறார் என்பது தான் நாம் பார்க்க வேண்டும் அவர் முடிவு எடுப்பதற்கு முன்பாக நாம் சட்டபூர்வமான நடவடிக்கையில் செல்ல முடியாது.

ஏற்கனவே நீட் தேர்வு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது அதை விரைந்து முடிப்பதற்கு அரசு பரிசீலனை செய்யும் என்றார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

Aunty கேரக்டருக்கு இது எவ்வளவோ மேல்… சிம்ரனை காயப்படுத்திய நடிகை இவரா?

90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…

5 minutes ago

எத்தனை வருடம் தான் காத்திருப்பது? மீண்டும் மீண்டும் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ!

கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் 253…

27 minutes ago

சூர்யாவை பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- பொதுமேடையில் விஜய்யை வம்பிழுத்த பிரபலம்!

கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

2 days ago

ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…

கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…

2 days ago

அதிகமான பாஜக எம்எல்ஏக்கள் இந்த முறை சட்டமன்றம் செல்வோம் : வானதி சீனிவாசன் உறுதி!

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…

2 days ago

நீங்க பேசாம சிம்புவை கல்யாணம் பண்ணிக்கோங்க… திரிஷாவுக்கு வந்த திடீர் கோரிக்கை!

நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…

2 days ago

This website uses cookies.