Categories: தமிழகம்

ஆளுநர்களும் முதலமைச்சர்களும் இணக்கமாக பணியாற்றினாலே போதும்… ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கருத்து!!

புதுச்சேரி ஆளுநரும் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார்.

சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலய சுவாமி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்ட அவரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீதர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.

இதேபோன்று பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் முத்துராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.

அப்போது செய்தியாளிடம் பேட்டி அளித்த கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன், வருகிற மார்ச் எட்டாம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது பெண் பிறவியை கும்பிட்டு பழக்கம் உள்ளவர்கள்.

நாம் அதனால் பெண்களுக்கு அனைத்து மரியாதையும் தரக் கோரிக்கை விடுக்கிறேன் என்றும் மக்கள் மருந்தகம் என்பது மிக்க மகிழ்ச்சியான ஒன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எளிய முறையில் வெகுவாக மிகக் குறைந்த விலையில் மக்கள் மருந்தகத்தில் அனைத்து மருந்துகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இதனை தொடங்கி வைத்தார்.

ஆனால் இதன் விழிப்புணர்வு மக்களிடம் மிகக் குறைவாகவே உள்ளது. 100 ரூபாய்க்கு கிடைக்கும் மாத்திரை மருந்துகள் கூட பத்து ரூபாய்க்கு கிடைக்கிறது.

பிரதமர் மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்ததற்கு பிறகு மக்கள் தங்கள் உடல் நலனை பேணி காப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

அதே போன்று மூட்டு அறுவை சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் பணம் செலவு செய்தவர்கள். தற்போது மிகக் குறைந்த தொகையை செலவு செய்து வருகிறார்கள். சுகாதாரத்தை பேணிக்காப்பதில் நமது பிரதமர் மோடியுடன் யாரையும் ஒப்பிட்டுச் சொல்ல முடியாது எனக்கு கூறிய அவர் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்ததன் மூலம் 45 லட்சம் பேரின் இறப்பு இந்தியாவில் தடுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார மையம் உயிரிழப்பு அதிகம் நடக்கும் நாடுகளில் இந்தியாவும் இருக்கும் என தெரிவித்தனர். ஆனால் அதை பிரதமர் மோடி பொய்யாக்கி உள்ளார்.

கொரோனாவிற்கு பிறகு மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இன்ஃப்ளுயன்சா இந்த நோய் பரவி வருகிறது என கேள்விப்பட்டு வருகிறோம். அதிக காய்ச்சலால் குழந்தைகளும் பெண்களும் சரி ஏன் ஆண்களும் சரி அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் கொரோனா முடிந்துவிட்டது என நினைத்து கையை கழுவாமலோ சமூக இடைவெளி இல்லாமலோ இருக்க வேண்டாம் உள்கட்ட அமைப்பை சரி செய்தால் தான் வருங்கால சந்ததியினருக்கு நல்ல நிர்வாகத்தை அளிக்க முடியும்.

சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னரும் இப்போதுதான் இது போன்ற முயற்சிகளை நாம் எடுக்க வேண்டி உள்ளது அதேபோன்று பிரதமர் மோடி அறிவித்துள்ள கதி சக்தி என்பதன் மூலம் ஏழு எட்டு துறைகள் இதன் மூலம் செயல்படும்.

ரயில்வே சுகாதாரம் நெடுஞ்சாலைத்துறை என அனைவரும் ஒருங்கிணைந்து முடிவு எடுத்து ஒரு திட்டத்தை ஒரு குறிப்பிட்ட கால நிர்ணயத்துக்குள் சரி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது இந்தியா ஐந்தாவது பொருளாதார நிலையில் இருந்து மூன்றாவது பொருளாதாரம் நிலைக்கு வந்துவிட்டது என்றும் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் மூலம் கொரோனாவுக்கு பிறகு அனைவருக்கும் அரிசி கொடுக்கப்பட்டுள்ளது பாஜக ஆளும் மாநிலங்களில் முதலமைச்சர்கள் கவர்னர்கள் செய்யும் நல்ல திட்டங்களை ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஆனால் இங்குள்ள முதல்வர்கள் கடமையாற்றினால் நான்கு சுகருக்குள் இருக்க வேண்டியது தானே என்றும் ஏன் வெளியில் வருகிறார்கள் என்றும் பேசுகிறார்கள்.

முதலமைச்சர்களும் ஆளுநர்களும் உட்கார்ந்து பேசி இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எனது கருத்து என்றும் நான் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் நான் ஏன் பேச வேண்டும் அதேபோன்று நான் ஆளுநர் நான் ஏன் பேச வேண்டும் என்ற சூழ்நிலை மாற வேண்டும் முதலமைச்சரும் ஆளுநரும் இணக்கமாக பணியாற்ற வேண்டும் அதுதான் மக்களுக்கு நல்லதாக இருக்கும்.

இணக்கம் என்பது எல்லா மாநிலங்களுக்கும் வர வேண்டும் ஒருவரை ஒருவர் குறை சொல்லாமல் இணக்கமாக பேசினால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும் மாநில முதல்வரும் மாநில ஆளுநர்களும் இணக்கமாக பணியாற்ற வேண்டும் என்பதே தனது கருத்து என்றும் அவர் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

4 minutes ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

49 minutes ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

2 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

2 hours ago

நான் இசைக்கடவுளா? ரசிகர்களுக்கு இளையராஜா இசைக் கட்டளை!

என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…

3 hours ago

கோலா, நகை விளம்பரம்.. விஜயை மறைமுகமாக சாடிய பிரேமலதா!

சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…

4 hours ago

This website uses cookies.