திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து காரைக்குடிக்கு 52 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை மதுரை கடச்சநேந்தலை சேர்ந்த கிருபாகரன் (வயது 36) ஒட்டி வந்தார்.
பேருந்து உலுப்பகுடி பேருந்து நிலையம் அருகே வரும்போது ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சி வலி ஏற்பட்டுள்ளது. உடனே சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் கிருபாகரன் பேருந்தை சாலையோரமாக நிறுத்தியுள்ளார்.
உடனே பயணிகளும், நடத்துனரும் அவரை ஆசுவாசப்படுத்தி அருகே இருந்த உலுப்பக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்ந்தனர்.
உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த உறவினர்கள் ஓட்டுனரை மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
நெஞ்சுவலி ஏற்பட்டதுடன் ஓட்டுநர் உடனே பேருந்தை பொறுமையாக இயக்கி சாலையோரம் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.