Categories: தமிழகம்

மலைகிராமத்துக்கு பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து : காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவிப்பு.. தமிழக அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை!!

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக 10 நாட்களுக்கு பிறகு இயக்கப்பட்ட அரசு பேருந்து வெள்ள நீரில் சிக்கியது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில்
அரிகியம், மாக்கம்பாளையம், கோம்பைதொட்டி உள்ளிட்ட பல கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.

இப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடம்பூரிலிருந்து சத்தியமங்கலம் செல்ல ஆபத்தான கரடு முரடான மண் சாலையில் இரண்டு காட்டாறுகளை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

கடந்த சில நாடகளாக மாக்கம்பாளையம் வனப்பகுதியில் பரவலாக கனமழை பெய்து வருவதால் குரும்பூர் பள்ளம் மற்றும் சக்கரைப்பள்ளம் ஆகிய 2 பள்ளங்களில் மழை நீர் காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் வழியாக மாக்கம்பாளையம் செல்லும் அரசு பேருந்து சர்க்கரை பள்ளத்தை கடக்க முற்பட்டபோது பள்ளத்தில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர் காரணமாக பேருந்து பள்ளத்தை கடக்க முடியாமல் பாதியிலேயே நின்றது.

பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாலும், பெரிய பெரிய கற்கள் இருந்ததால் இடிபாட்டில் சிக்கிய பேருந்து நகர முடியாமல் பாதி வழியிலேயே நின்று போனது.

நேற்றைய தினம் சர்க்கரை பள்ளத்தைத் தாண்டி மாக்கம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவிற்கு சென்றவர்கள் திரும்பி வரும் போது சர்க்கரை பள்ளத்தில் சென்ற காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கொண்டது போல இன்றும் அரசு பேருந்து சிக்கிக்கொண்டது.

கிராம மக்கள் ஒன்று சேர்ந்து டிராக்டர் மற்றும் ஜே.சி.பி இயந்திரங்களை வரவழைத்து முன் பகுதியில் டிராக்டரில் கயிறு கட்டியும், பின் பகுதியில் ஜேசிபியை வைத்து தள்ளியும் மூன்று மணி நேரத்திற்கு பிறகு அரசுப் பேருந்தை போராடி, மீட்டு கரை சேர்த்தனர்.

மழை காலங்களில் இந்த காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போதெல்லாம், போக்குவரத்து துண்டிப்பு ஏற்படுவது, தொடர் கதையாகவே உள்ளது.

குரும்பூர் பள்ளம் மற்றும் சக்கரை பள்ளம் என இரண்டு காட்டாறுகளின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுவதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளதாக கூறப்பட்டடு வரும் நிலையில், விரைவில் பாலம் கட்டுவதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்று அக்கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

7 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

8 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

9 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

9 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

10 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

10 hours ago

This website uses cookies.