தமிழகம்

குழந்தை பெற்றெடுத்த பள்ளி மாணவி.. கடலூரில் அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது!

கடலூரில் பள்ளி மாணவி கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுத்த நிலையில், இது தொடர்பாக அரசுப் பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர்: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த பகுதியில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் மலர் செல்வம் என்பவர் வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவர் கடந்த ஆண்டு பள்ளி ப்படிப்பை முடித்துச் சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், அந்த மாணவி தற்போது சென்னையில் முதலாம் ஆண்டு கல்லூரி படித்து வருகிறார். இதனிடையே, கடந்த டிசம்பர் 15ஆம் தேதி வயிற்றுவலி காரணமாக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டு உள்ளார். அப்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் மருத்துவர்கள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து. இது தொடர்பாக விசாரிக்கையில். தன்னுடைய பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய மலர் செல்வம் என்பவர் தன்னை பலமுறை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியதாக அதிர்ச்சி தகவல் அளித்துள்ளார்.

அதேநேரம், இதுகுறித்து வெளியே கூறினால் செய்முறை பாடம் மதிப்பெண்ணில் கை வைத்து விடுவேன் எனவும் மிரட்டி, பலமுறை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை அளித்துள்ளார். இதனை அடுத்து வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த மலர் செல்வத்தை போலீசார் நேரடியாகச் சென்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதையும் படிங்க: ரகசிய மனைவியான நடிகையின் சகோதரி.. சிவாஜி மகன் செய்த சதி!

இதனை அடுத்து, காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இதுபோல் வேறு ஏதும் மாணவிகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளாரா என்பது குறித்தும் சேத்தியார்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

அதிமுகவை முந்தும் தவெக.. கூட்டணி கட்டாயத்தில் இரட்டை இலை? பரபரப்பு சர்வே!

சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…

33 minutes ago

மட்டம் தட்டிய பத்திரிகையாளர்..கொந்தளித்த CSK பயிற்சியாளர்..என்ன நடந்தது.?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும்…

39 minutes ago

நிமிடத்திற்கு ஒரு கோடியா..ஐபிஎல் விட அதிக சம்பளம் வாங்கிய டேவிட் வார்னர்.!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது சினிமா அறிமுகத்திலேயே அவர் வாங்கி இருக்கும் சம்பளம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.தெலுங்கு…

1 hour ago

விரைவில் இபிஎஸ் – அண்ணாமலை சந்திப்பு? மத்தியில் ஒலித்த குரல்.. பரபரக்கும் அரசியல் களம்!

அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…

2 hours ago

ஊரு விட்டு ஊரு வந்து பெண்ணை தீக்கிரையாக்கிய கொடூரம்.. தூத்துக்குடியில் பரபரப்பு!

தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…

3 hours ago

தோனியை நீக்குங்க..படு மோசம் CSK ரசிகர்கள்..இப்படியெல்லாமா பண்ணுவாங்க.!

தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…

3 hours ago

This website uses cookies.