மதுரை, உசிலம்பட்டி அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், விக்கிரமங்கலம் பகுதியில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி ஒருவர், விடுதியில் தங்கி பயின்று வருகிறார். மேலும், இந்தப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மூர்த்தி என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், இந்த மாணவியிடம் ஆசிரியர் மூர்த்தி தான் சொல்வதற்கு இணங்க வேண்டும் எனக் கூறி பாலியல் தொல்லை அளித்ததாகவும், தன்னை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்ததாகவும் மாணவி தரப்பில், அவரது பெற்றோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
மேலும் தன்னிடம் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியதோடு, தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் மாணவியின் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் மாணவி, பள்ளியிலே தற்கொலைக்கு முயன்ற நிலையில் சக மாணவிகள் அவரைக் காப்பாற்றியதாகவும், இதனையடுத்து மாணவியின் உடன் இருந்த மற்ற மாணவிகள் அவரது தாயாரிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர்.
மேலும் இது குறித்து புகார் அளிக்கக்கூடாது என மிரட்டல்கள் வந்ததாகவும் பெற்றோர் தெரிவித்தனர். இந்த நிலையில், இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் சிவராம பாண்டியன், சம்பந்தப்பட்ட ஆசிரியர் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கடந்த 24 ஆண்டுகளாக பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார் என உறுதிப்படுத்தினார்.
மேலும், கடந்த 2 நாட்களாக விடுமுறையில் இருந்ததாகவும், மாணவி விவகாரம் தற்போது தான் தனக்கு தெரிய வந்திருப்பதாகவும், அதேநேரம் மாணவி தன்னிடம் புகார் எதுவும் அளிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குறையை மட்டுமே சொல்றாங்க.. எலும்பை உடைக்கணும் : அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேச்சு!
மேலும் இது சம்பந்தமாக பள்ளி மாணவிகளிடம் விசாரித்துள்ளதாகவும், தற்போது ஆசிரியரை பணி செய்ய வேண்டாம் எனக் கூறியுள்ளதாகவும் கூறினார். மேலும், இது தொடர்பாக மாவட்டக் கல்வி அதிகாரியிடம் தகவல் தெரிவித்து உள்ளதாகவும் கூறியுள்ளார்.
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
This website uses cookies.