தமிழகம்

குடிபோதையில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. சேலம் அரசுப் பள்ளியில் அட்டூழியம்!

சேலம் அரசுப் பள்ளி ஒன்றில் குடிபோதையில் வந்த ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம்: சேலம் மாவட்டத்தில் இருப்பாளி அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும், இங்கு பிரகதீஸ்வரன் என்பவர் தற்காலிக தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற்று உள்ளது. அப்போது தமிழ் ஆசிரியர் பிரகதீஸ்வரன், மது போதையில் சிறப்பு வகுப்புக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. அதோடு, அவர் ஒரு மாணவியிடம் ஆபாசமாகப் பேசியது மட்டுமல்லாமல், பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டு உள்ளார்.

பின்னர் வீட்டுக்குச் சென்ற மாணவி, இது குறித்து பெற்றோரிடம் கூறி அழது உள்ளார். இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து பெற்றோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பிரகதீஸ்வரனை கைது செய்து உள்ளனர்.

இதையும் படிங்க: 2 attempt தோல்வி.. 3வது முயற்சியில் காதல் கணவனைக் கொன்ற மனைவி!

தொடர்ந்து, நேற்று தற்காலிக ஆசிரியர் பிரகதீஸ்வரன் பணி நீக்கமும் செய்யப்பட்டு உள்ளார். மேலும், இது தொடர்பான அறிக்கை மாவட்டக் கல்வி அலுவலர் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அரசுப் பள்ளியில் மதுபோதையில் வந்த ஆசிரியர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Hariharasudhan R

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

12 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

12 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

13 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

14 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

15 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

18 hours ago

This website uses cookies.