Categories: தமிழகம்

அரசுப் பள்ளி மாணவிகள் திடீர் சாலை மறியல்.. செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை அடிக்க பாய்ந்த டிஎஸ்பி : பழனியில் பரபரப்பு!!

பழனி அரசு பள்ளி மாணவிகள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். சாலைமறியல் சம்பவத்தை படம் பிடித்த செய்தியாளர்களை படம் பிடிக்க கூடாது எனக்கூறி பழனி காவல்துறை டிஎஸ்பி சிவசக்தி தாக்க முயன்றதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சத்யா நகரில் அரசு ஆதிதிராவிட நலத்துறை மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதியில் தங்கியுள்ள மாணவிகளுக்கு பாலியல் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டதாக எழுந்த பிரச்சினையில் அதே பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக விடுதி கண்காணிப்பாளர் அமுதா என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அமுதாவையே மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் எனக்கோரி இன்று விடுதி மாணவிகள் பதாகைகளை ஏந்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் இந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவிகளின் சாலை மறியல் போராட்டத்தை செய்தியாளர்கள் படம் பிடித்தனர்.

அப்போது ஆவேசம் அடைந்த பழைய டிஎஸ்பி சிவசக்தி படம் பிடிக்கக் கூடாது எனக் கூறி செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி ஆவேசமடைந்த டிஎஸ்பி சிவசக்தி அங்கு படம் பிடித்துக் கொண்டிருந்த செய்தியாளரை தாக்க முயன்றார்.

இதனால் அங்கு கடும் பத்திரிக்கையாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மற்ற போலீசார் டிஎஸ்பியை சமாதானம் செய்தனர்.

அரசு பள்ளி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில், போராட்டத்தை கைவிட பேச்சுவார்த்தை நடத்தவேண்டிய டிஎஸ்பி, போராட்டத்தை செய்தியாக வெளியிடும் பத்திரிகையாளர்கள் மீது ஆவேசம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ரோகித்தின் மோசமான உலக சாதனை.. தீயான குல்தீப் யாதவ்.. திணறிய நியூசிலாந்து.. இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…

15 hours ago

மனவருத்தம் இல்லை.. ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் பிரேமலதா அதிரடி பதில்!

ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…

16 hours ago

திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!

சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…

18 hours ago

கூட்டணி குறித்து கேட்டால் இதைச் சொல்லுங்க.. அதிமுகவிடம் எதிர்பார்ப்பு.. முக்கிய காய் நகர்த்தும் இபிஎஸ்

அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…

19 hours ago

வாய்க்காலில் கிடந்த சடலம்.. சிக்கிய நண்பர்கள்.. திருட்டால் பறிபோன உயிர்!

கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…

20 hours ago

மேட்ச் முடிவில் காத்திருக்கும் அதிர்ச்சி.. டாப் 3 வீரர்களின் நிலைப்பாடு என்ன?

இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…

21 hours ago

This website uses cookies.