ஆந்திர மாநிலம் போல் திரையரங்கு டிக்கெட் விற்பனை மற்றும் முன்பதிவு ஆகியவற்றை ஒழுங்குமுறைபடுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதனிடையே, ஆந்திராவில் திரைப்படங்களுக்கான டிக்கெட் விற்பனையை அரசு இணைதளம் மூலம் மட்டுமே செயல்படுத்த வேண்டும் என அம்மாநில அரசு அறிவித்தது. அதற்காக 2% மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. ஆனால் அந்த முறை இன்னும் முழுமையாக அமலுக்கு வரவில்லை.
இந்த நிலையில் இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பத்திரிகையாளர் பிஸ்மி பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, இந்தியாவில் திரைப்பட டிக்கெட்களை Book My Show, ticket new, paytm போன்ற Nodal Agency இணைதளங்கள் மூலம் முன்பதிவு செய்யலாம். இதற்காக அந்த நிறுவனங்கள் GSTயுடன் சேர்த்து ஒரு டிக்கெட்டிற்கு 35 ரூபாய் வசூலிக்கின்றன.
இது மக்களிடம் கொள்ளையடிக்கும் செயல் கூறுகின்றார்.தொடர்ந்து பேசிய திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், பிஸ்மி முட்டாள்தனமாக பேசுகிறார். திரையரங்கு உரிமையாளர்கள் மீது வீண் பழியை போடுகிறார் என கடுமையான கண்டனங்களை தெரிவித்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.