மதுரை தத்தனேரியை சேர்ந்தவர் மத்திய குற்றப்பிரிவு சிறப்பு எஸ்.ஐ முருகானந்தம். இவரது மகள் லாவண்யா 23. கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். நேற்று முன்தினம் லாவண்யாவின் தாத்தா பிரமியப்பன் மதுரையில் காலமானார்.
தாத்தாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக மதுரை அண்ணாநகரை சேர்ந்த நண்பர் யுவராஜ் 24, உடன் டூவீலரில் நேற்று வந்தார்.
அதிகாலை 5:00 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் பழநி ஆயக்குடி அருகே எரமநாயக்கன்பட்டி பிரிவு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் சாலை நடுவில் உள்ள தடுப்பில் மோதியது. இதில் லாவண்யா சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.நேற்று மாலை தத்தனேரி மயானத்தில் தாத்தா, பேத்தி இருவர் உடலும் தகனம் செய்யப்பட்டது.
தாத்தாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த பேத்தியும் சாலை விபத்தில் பலியானது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.