Categories: தமிழகம்

பேத்திக்கு தாலி கட்ட முயற்சித்த தாத்தா… தடுத்து நிறுத்திய சித்தப்பா.. தோட்டத்தில் அரங்கேறிய அசிங்கம் : ஷாக் சம்பவம்!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த கூடக்கோவில் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு 4 மகள்கள், 1 மகன் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் முதியவரின் மகன் உயிரிழந்து விட்டார்.

இதையடுத்து ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் மறுமணம் செய்ய முதியவர் முடிவெடுத்துள்ளார். தனது மூத்த மகளிடம் முதியவர் இது பற்றி கூற, வேறொரு பெண்ணை திருமணம் செய்வதற்கு பதில் என்னுடை மூத்த மகளாக 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்ளுங்கள் என அப்பாவிடம் கூறியுள்ளார்.

இதனை ஏற்றுக் கொண்ட முதியவரோ திருமணம் குறித்து உறவினர்களிடம் பேசி அவர்களிடம் சம்மதம் பெறும் முயற்சியில் ஈடுபட்டார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமி, தாத்தாவை திருமணம் செய்ய மறுத்து, இந்த விஷயத்தை தனது சித்தப்பாவிடம் கூறியுள்ளார்.

நீ ஒன்றும், பயப்பட வேண்டாம் அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சிறுமியை அரவணைக்கும் தொணியில் பேசி அவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி சித்தப்பா அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும் இந்த பாலியல் அத்துமீறல் தினமும் தொடர்ந்துள்ளது. வெளியில் சொன்னால் வாழ்க்கையே பாதிக்கப்படும் என்பதால் சித்தப்பாவின் இச்சைகளுக்கு பலியாகியுள்ளார் சிறுமி.

இந்த நிலையல் ஒரு நாள் சிறுமியும், சித்தப்பாவும் தோட்டத்தில் தனிமையில் இருந்ததை அவரது தாய் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
சிறுமியின் தாயை சமாதானப்படுத்தி சித்தப்பா, இந்த விவகாரத்தை வெளியில் கூற வேண்டாம். ஆண் வாரிசுக்காக சிறுமியை தாத்தாவுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறீர்கள், ஆண் வாரிசை நானே பெற்று தருகிறேன்.

மேலும் வீட்டு செலவுக்கு பணமும் தருகிறேன். சிறுமியை எனக்கு திருமணம் செய்து வைத்துவிடு என சித்தப்பா தெரிவித்துள்ளார்.

இந்த கோரிக்கைக்கு சிறுமியின் தாயும், தாத்தாவும் ஒப்புக் கொண்டனர். மேலும் இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால் குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும் என்பதால் சித்தப்பாவும் சிறுமியும் வெளியூரில் சென்று திருமணம் செய்து கொண்டு வாழத் தொடங்கியுள்ளனர்.

யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக சிறுமியை காணவில்லை என்று போலீஸ் நிலையத்தில் பொய்யாக புகார் ஒன்றை அளித்துவிடலாம் என முடிவு செய்து அதன்படி புகாரும் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசா அனைத்து உண்மைகளையும் கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்தனர்.
இறுதியில் சிறுமியின் சித்தப்பா, தாய், தாத்தா என மூவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமி குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

1 day ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

1 day ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

1 day ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

1 day ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

1 day ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

1 day ago

This website uses cookies.