அரசு பேருந்தில் அவஸ்தை : மூதாட்டியின் அலப்பறை… பேருந்து செல்லாது என எழுதிக்கொடுக்க சொன்ன பாட்டீம்மாவின் லூட்டிகள்!!

கோவை காந்திபுரம் நகரப் பேருந்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகரப் பேருந்துகள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது.

இந்த நிலையில் 50 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்து பணிமனை நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்து காந்திபுரம், உக்கடம், ஆத்துப்பாலம், மதுக்கரை, பாலத்துறை ஆகிய இடங்களுக்கு செல்கிறது.

இந்த நிலையில் பேருந்தில் ஏறிய மூதாட்டி பச்சாபாளையத்திற்கு வண்டியை விட வேண்டும் என வற்புறுத்தி உள்ளார். நடத்துனர் இந்த வாகனம் பணிமனைக்கு செல்கிறது என பலமுறை கூறியும் அநத் மூதாட்டி இறங்க மறுத்துள்ளார்.

மேலும் மூதாட்டி வண்டியை பச்சாபாளையத்துக்கு விடு என அசால்லட்டாக கூறினார். இந்த பேருந்து பச்சா பாளையம் எல்லாம் செல்லாது என்றும், தற்போது பணிமனைக்கு செல்கிறது என கூற, மூதாட்டியோ தன் கொள்கையில் இருந்து கடுகளவு கூட பின்வாங்கவில்லை.

என்ன செய்வதென்று புரியாமல் ஓட்டுநர், நடத்துநர் தவிக்க, பேருந்தில் இருந்து மூதாட்டி இறங்ககாததால், பேருந்தை இயக்காமல் அதே இடத்தில் நீண்ட நேரம் நின்றது.

வண்டியை மேற்க்கால விடு எனவும் இல்லையென்றால் இந்த பேருந்து செல்லாது என எழுதிக் கொடு என கேட்டுள்ளார். இதற்கு அந்த நடத்துனர் இப்படியெல்லாம் தொல்லை கொடுத்தால் எப்படி நாங்கள் வாகனத்தை ஓட்டுவது என வேதனை தெரிவித்து உள்ளார்.

மேலும் இலவச பயணம் வந்தாலும் வந்தது சிலர் பேருந்து தங்களுக்கு சொந்தம் என நினைத்துக் கொள்கின்றனர். அதேபோல ஓட்டுனர் நடத்துனர் தங்களுக்கு அடிமை என நினைத்து பல்வேறு பிரச்சினைகளை கையாண்டு வருகின்றனர்.

மாணவர்களின் அடிக்கடி படிக்கட்டு பயண அட்டகாசத்தை பொறுத்துக்கொள்ளும் ஓட்டுநர், நடத்துநர் இந்த பாட்டியின் அலப்பறையால் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றனர். ஒரு கட்டத்தில் பரிதாபமாக நின்ற நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது இறக்கப்ப்டட மூதாட்டி பேருந்தில் இருந்து இறங்கி வேறு ஒரு பேருந்தில் பச்சாபாளையம் சென்றார்.

தினம் தினம் போக்குவரத்து ஊழியர்கள் எதிர்கொள்ளும் இது போன்ற பிரச்சனைகளை கருத்தில் கொள்ளாமல், அரசு பேருந்தில் பிரச்சனை என்றால் உடனடியாக பேருந்து ஓட்டுநர் நடத்துநர் மீது நடவடிக்கை மேற்கொள்வது சரியா என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கேள்வியை எழுப்பி இந்த வீடியோவை சமூக வலைதளங்களல் பகிர்ந்து வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மதம் மாறச் சொன்ன அமீர்? பாவனி போட்ட ஒரே ஒரு கண்டிஷன்! இப்படி எல்லாம் நடந்திருக்கா?

பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…

2 hours ago

பெண் ஆசிரியரை செருப்பால் அடித்த கல்லூரி மாணவி.. அதிர்ச்சி வீடியோ!

ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…

2 hours ago

அப்போ எல்லாமே செட்டப்பா? உஷாராக பிளான் போட்ட கமல்ஹாசன்? இதான் விஷயமா?

பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…

3 hours ago

திடீரென வெளியான வீடியோ…அதிர்ச்சியில் உறைந்து போன பிரியா வாரியர்!!

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…

3 hours ago

பஸ் கண்டக்டருடன் உல்லாசம்.. ரகசிய வீடியோ : தப்பான சகவாசத்தால் விபரீதம்!

பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…

4 hours ago

ரெட்ரோ படத்தில் வடிவேலு? சீக்ரெட்டை போட்டுடைத்த இயக்குனர்? ஆனா அங்கதான் ஒரு டிவிஸ்ட்!

புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…

4 hours ago

This website uses cookies.