கோவை : வெள்ளலூர் குப்பை கிடங்கில் லாரியில் இருந்து குப்பை கொட்டும் போது 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி குப்பையில் புதைந்து உயிரிழந்தார்.
கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் இருந்து நாள்தோறும் டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
நூற்றுக்கணக்கான லாரிகளில் குப்பைகள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் நாள்தோறும் கொட்டப்பட்டு வரும் நிலையில் இன்று குப்பை கிடங்கில் பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்துக் கொண்டிருந்த மூதாட்டி மீது லாரியில் இருந்த குப்பை கொட்டி அதில் மூதாட்டி புதைந்து பலியானார்.
வெள்ளலூர் குப்பை கிடங்கில் தனியார் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 70 பேர் பிளாஸ்டிக் மற்றும் தொட்டிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமாக இன்று அவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்த போது லாரியிலிருந்து குப்பை கொட்டி அதில் மூதாட்டி மீது குப்பை முழுவதுமாக விழுந்து குப்பையில் புதைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தொடர்ந்து சக ஊழியர்கள் தகவல் தெரிவித்தன் அடிப்படையில் குப்பையிலிருந்து மூதாட்டி பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போத்தனூர் காவல்துறையினர் வெள்ளலூர் குப்பை கிடங்கில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
வரிசையாக களமிறங்கும் சிம்பு “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு தான் தொடர்ந்து நடிக்கவுள்ள மூன்று திரைப்படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
தேர்தலை சந்திக்கப்போகும் விஜய் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடையவுள்ள நிலையில் ஜூன்…
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு HRWF பவுண்டேஷன் என்ற தனியார் அறக்கட்டளை சார்பாக "மகுடம்" விருதுகள் (2025) வழங்கும் விழா சென்னை…
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
This website uses cookies.