கோவையில் பிரதமர் ரோடு ஷோ நடத்த க்ரீன் சிக்னல்.. நீதிமன்றம் படியேறிய பாஜக : நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு!
கோவையில் வரும் 18ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் வாகனப் (ரோடு ஷோ) பேரணிக்கு மாநகர காவல்துறை அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்திருந்தது. இதற்கு எதிராக கோவை மாவட்ட பாஜக சார்பில் சென்னை உயநீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்ற நிலையில், பேரணிக்கு அனுமதி வழங்குவதில் என்ன பிரச்சினை என கேள்வி எழுப்பினார்.
அப்போது காவல்துறை தரப்பில் கூறியதாவது, தேர்வு நாள் என்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் அனுமதி வழங்கவில்லை. அதுமட்டுமில்லாமல், பிரதமருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தாலும் அனுமதி மறுத்திருப்பதாக விளக்கமளித்தது. இதையடுத்து, இந்த மனு மீதான உத்தரவு இன்று மாலை பிறப்பிக்கப்படும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கோவையில் வரும் 18ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பாஜகவின் ‘ரோடு ஷோவுக்கு’ அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். அதாவது, கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் வாகன பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பேரணி செல்லும் வழி, தொலைவு மற்றும் நேரம் ஆகியவற்றை கோவை காவல்துறையினரே முடிவு செய்யலாம் என்றும் பேரணி செல்லும் பகுதிகள், சாலைகளில் பதாகைகள் வைக்க அனுமதி இல்லை எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நிபந்தனை விதித்துள்ளார். வரும் 18ம் தேதி பிரதமர் மோடியின் வருகையின்போது கோவையில் 4 கிமீ தூரத்துக்கு ரோடு ஷோ நடத்த காவல்துறையிடம் பாஜக அனுமதி கோரியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.