Categories: தமிழகம்

நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ வீரர்: கோவை ஆயுதப்படை காவலா்கள் ஒன்றிணைந்து நிதியுதவி அளித்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

கோவை: ராணுவ பணியின் போது உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்தினருக்கு கோவையை சேர்ந்த ஆயுதப்படை காவலா்கள் ஒன்று சேர்ந்து பணம் வசூல் செய்து நிதியுதவி அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்ட ஆயுத படையில் முதல்நிலை காவலராக பணிபுரிபவர் பாபு . சமூக ஆா்வலரான இவா் தன்னுடன் பணிபுரியும் சக காவலர்களிடம் பணம் வசூல் செய்து காவலர்களின் குடும்பம் மற்றும் ஏழை, எளியோருக்கு அவ்வப்போது உதவி செய்து வருகின்றார்.

முக்கியமாக காவல் துறை மற்றும் ராணுவத்தில் பணியாற்றும் போது உயிா் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக, நண்பா்கள் மற்றும் சக காவலா்களை ஒருங்கிணைத்து உதவும் கரங்கள் என்ற குழு அமைத்து அதன் மூலமாக உதவிகள் செய்து வருகின்றார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இராணுவத்தில் பணியாற்றி வந்த தருமபுாி மாவட்டம் பாலக்கோடு கம்மாளப்பட்டி பகுதியை சோ்ந்த பூபதி என்ற வீரர் விபத்தில் உயிரிழந்தார். இதே போல எல்லை பாதுகாப்பு படையில் வேலை பார்த்த
திருவண்ணாமலை மாவட்டத்தை சோ்ந்த பிரகாஷ் என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இந்நிலையில் ஆயுதபடை காவலர் உயிரிழந்த இரு வீரர்களின் குடும்பத்திற்காக சக காவலர்கள் மற்றும் நண்பர்களிடம் நன்கொடை வசூல் செய்தார். இரண்டு லட்சம் ரூபாய் நிதி திரட்டிய நிலையில், இன்று கோவை மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் சார்பாக இரு குடும்பத்தினரிடமும் நிதி உதவியினை காவலர் பாபு வழங்கினார். ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா லட்சம் வீதம் உதவி தொகையானது வழங்கப்பட்டது.

இதுவரை ராணுவ வீரா் அல்லது காவல்துறையினா் உயிா் இழந்தால் சம்பந்த பட்ட துறையினா் மட்டுமே நிதி திரட்டி வழங்கி வந்த நிலையில் , ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரியும் வீரர்களுக்காக கோவை மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் இணைத்து உதவி இருப்பது குறிப்பிட தக்கது. கோவை ஆயுதபடை காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள் இணைந்து மனிதநேயத்துடன் நாட்டுக்காக உயிர் இழக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

UpdateNews360 Rajesh

Recent Posts

தமிழ் மட்டுமே உயிர் மூச்சு… காமராஜரின் தொண்டன் : கடைசி வரை கட்சி மாறாத குமரி அனந்தன்!

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமான காலமானார். அவருக்கு வயது 93. நேற்று இரவு 12.30…

32 minutes ago

நள்ளிரவில் பாஜக தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததால் பதற்றம்.. வெடிகுண்டை வீசிய மர்மநபர்கள் யார்?

நள்ளிரவில் பாஜக தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததால் பதற்றம் உருவாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் காலியா முன்னாள் எம்எல்ஏவாக…

1 hour ago

படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!

படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…

14 hours ago

நீட் தேர்வுக்கான அனைத்துக்கட்சி கூட்டம் ஒரு நாடகம்.. இபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…

14 hours ago

அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!

பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…

15 hours ago

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

17 hours ago

This website uses cookies.