பிரபல ஏ ப்ளஸ் ரவுடி படப்பை குணா ஆக்கிரமிப்பு செய்திருந்த சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபல ஏ ப்ளஸ் ரவுடி படப்பை குணா கடந்த ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்து வருகின்றார்
தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளதுரை தலைமையில் போலீசார் படப்பை குணாவை என்கவுண்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாக சமூக வலைய தலங்களில் வைரலாக பரவி வந்தது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே மதுரமங்கலம் பகுதியில் அரசுக்கு சொந்தமான சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள நீர்வடி கால்வாயில் 5 ஏக்கர் நிலத்தை சுமார் 12 ஆண்டுகளாக ரவுடி குணா ஆக்கிரமித்திருந்தார்.
மாவட்ட நிர்வாகத்துக்கு வந்த தகவலின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் அந்த அரசு நிலம் மீட்கப்பட்டது.
இந்த இடத்தின் தற்போதைய சந்தை விலை சுமார் 15 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது. தலைமறைவாக உள்ள பிரபல ரவுடி படப்பை குணா மீது கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், வழிப்பறி என 42 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படும் பிரபுதேவா, மிகப் பிரபலமான நடிகர் மட்டுமல்லாது மிகச் சிறந்த…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…
அஜித்தின் குட் பேட் அக்லி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
This website uses cookies.