Categories: தமிழகம்

காஞ்சியில் பிரபல ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்த ரூ.15 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு : குளங்களையும் மீட்ட அரசு அதிகாரிகள்!!

பிரபல ஏ ப்ளஸ் ரவுடி படப்பை குணா ஆக்கிரமிப்பு செய்திருந்த சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபல ஏ ப்ளஸ் ரவுடி படப்பை குணா கடந்த ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்து வருகின்றார்

தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளதுரை தலைமையில் போலீசார் படப்பை குணாவை என்கவுண்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாக சமூக வலைய தலங்களில் வைரலாக பரவி வந்தது.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே மதுரமங்கலம் பகுதியில் அரசுக்கு சொந்தமான சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள நீர்வடி கால்வாயில் 5 ஏக்கர் நிலத்தை சுமார் 12 ஆண்டுகளாக ரவுடி குணா ஆக்கிரமித்திருந்தார்.

மாவட்ட நிர்வாகத்துக்கு வந்த தகவலின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் அந்த அரசு நிலம் மீட்கப்பட்டது.

இந்த இடத்தின் தற்போதைய சந்தை விலை சுமார் 15 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது. தலைமறைவாக உள்ள பிரபல ரவுடி படப்பை குணா மீது கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், வழிப்பறி என 42 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பிரபுதேவாவால் பெண்டு கழண்டுப்போன டான்சர்கள்- இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டான ஆளா இவரு?

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படும் பிரபுதேவா, மிகப் பிரபலமான நடிகர் மட்டுமல்லாது மிகச் சிறந்த…

12 minutes ago

என்னைய இப்படி காமிச்சிருக்கியேடா- ஆதிக் ரவிச்சந்திரனிடம் அஜித் சொன்ன GBU விமர்சனம்?

ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…

1 hour ago

தல சுற்ற வைக்கும் GBU முதல் நாள் வசூல் வேட்டை… எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?

அஜித்தின் குட் பேட் அக்லி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக…

1 hour ago

அமைச்சர் பொன்முடியின் பதவி பறிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்ததரவு!

திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…

2 hours ago

திமுக அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு… கொந்தளித்த கனிமொழி எம்பி : என்ன நடந்தது?

திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…

2 hours ago

அதிமுகவில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்…. கோவை மாவட்ட முக்கிய பிரமுகரின் திடீர் அறிவிப்பு!!

கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…

15 hours ago

This website uses cookies.