திருச்சி : திருச்சி வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 42 கிலோ குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி ரயில்வே பாதுகாப்பு படையினர் திருச்சி வரும் ரயில்களில் சிறப்பு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தஞ்சையில் இருந்து திருச்சி வந்த ரயிலில் உதவி ஆய்வாளா் வீரக்குமார், தலைமையில் காவலா்கள் ரெயில் பெட்டிகளிலும் சோதனை செய்தனா். அப்போது ஒரு பெட்டியில் உள்ள கழிவறைக்கு முன்பு கேட்பாரற்று கிடந்த பிளாஸ்டிக் பையை கைப்பற்றினார்கள். அந்த பையை சோதனை செய்தபோது அதில். அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகள் என சுமார் 16.500 கிலோ இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து ரயிலில் வந்த பயணிகளிடம் விசாரிக்கையில் அவர்கள் யாரும் அந்த பையை தங்களது இல்லை என்று தெரிவித்ததால், காவல்துறையினர் பையில் இருந்த கிருஷ்ணமூர்த்தி குப்பனார்பட்டி, பெரியபட்டி என்று விலாசத்தை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் 56 ஆயிரம் ரூபாய் வரை இருக்கலாம் எனஅதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதேபோல் இராமேஸ்வரத்தில் இருந்து வாராணசி விரைவு ரயில் திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்திற்கு வந்தபோது ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில்,
அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பவுடா் வடிவில் ஒரு பெட்டிக்குள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் பரிசோதித்தபோது சுமார் 26 கிலோ எடை கொண்ட புகையிலை பவுடா் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவற்றை ரயில்வே பாதுகாப்பு படையினா் அவற்றை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது மக்கள நீதி மையம். இக்கட்சியின் தலைவராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். கடந்த மக்களவை…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலம் மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதிக்கு அருகேயுள்ள அரிச்சல்பட்டிஎன்ற ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த தம்பான்…
மனநலம் பாதிக்கப்பட்டதா? “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”, “மாநகரம்” போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் நடிகர் ஸ்ரீ. “மாநகரம்” திரைப்படத்திற்குப் பிறகு…
விடாமுயற்சி படுதோல்விக்கு பிறகு அஜித்தின் குட் பேட் அக்லி படம் மீது ரசிகர்களுக்கு பயங்கர எதிர்ப்பார்ப்பு எழுந்தது. அதன்படியே ரசிகர்களுக்கு…
ஆந்திர மாநில துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணின் 7 வயது மகன் மார்க் ஷங்கர் சிங்கப்பூரில்…
வரிசையாக களமிறங்கும் சிம்பு “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு தான் தொடர்ந்து நடிக்கவுள்ள மூன்று திரைப்படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
This website uses cookies.