திருச்சி : திருச்சி வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 42 கிலோ குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி ரயில்வே பாதுகாப்பு படையினர் திருச்சி வரும் ரயில்களில் சிறப்பு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தஞ்சையில் இருந்து திருச்சி வந்த ரயிலில் உதவி ஆய்வாளா் வீரக்குமார், தலைமையில் காவலா்கள் ரெயில் பெட்டிகளிலும் சோதனை செய்தனா். அப்போது ஒரு பெட்டியில் உள்ள கழிவறைக்கு முன்பு கேட்பாரற்று கிடந்த பிளாஸ்டிக் பையை கைப்பற்றினார்கள். அந்த பையை சோதனை செய்தபோது அதில். அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகள் என சுமார் 16.500 கிலோ இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து ரயிலில் வந்த பயணிகளிடம் விசாரிக்கையில் அவர்கள் யாரும் அந்த பையை தங்களது இல்லை என்று தெரிவித்ததால், காவல்துறையினர் பையில் இருந்த கிருஷ்ணமூர்த்தி குப்பனார்பட்டி, பெரியபட்டி என்று விலாசத்தை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் 56 ஆயிரம் ரூபாய் வரை இருக்கலாம் எனஅதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதேபோல் இராமேஸ்வரத்தில் இருந்து வாராணசி விரைவு ரயில் திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்திற்கு வந்தபோது ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில்,
அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பவுடா் வடிவில் ஒரு பெட்டிக்குள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் பரிசோதித்தபோது சுமார் 26 கிலோ எடை கொண்ட புகையிலை பவுடா் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவற்றை ரயில்வே பாதுகாப்பு படையினா் அவற்றை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.