தமிழகம்

அதெல்லாம் சொல்ல முடியாது.. இபிஎஸ் உடனான சந்திப்பு.. மனம் திறந்த எச்.ராஜா!

தமிழகத்தில் பாஜக கூட்டணி பற்றி அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அது குறித்து நான் கருத்து சொல்ல மாட்டேன் என எச்.ராஜா கூறியுள்ளார்.

சென்னை: பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காயத்ரி தேவியின் மகள் திருமண விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதற்காக, அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார்.

அவரை, தமிழக பாஜக துணைத் தலைவர் கரு நாகராஜன் வாசலில் சென்று வரவேற்று உள்ளே அழைத்து வந்தார். பின்னர், பூங்கொத்து கொடுத்து மணமக்களை வாழ்த்தினார் எடப்பாடி பழனிசாமி. இதனையடுத்து, நிகழ்வில் இருந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உடன் கைகுலுக்கி இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர்.

இதனிடையே, அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் அமையும் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், இபிஎஸ் – எச்.ராஜா சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் பெற்றது. இந்த நிலையில், இந்தச் சந்திப்பு குறித்து தனியார் செய்தி தொலைக்காட்சியிடம் பேசிய எச்.ராஜா, “இது ஒரு திருமண நிகழ்ச்சி. எனவே, ஒருவரையொருவர் நலம் விசாரித்தோம்.

அரசியல் பற்றி பேசவில்லை” எனக் கூறியுள்ளார். மேலும், அதிமுக – பாஜக உடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் என திமுக கூறியுள்ளது குறித்து பேசிய எச்.ராஜா, “அமைதிப்படையை அனுப்பி இலங்கையில் தமிழர்களைக் கொன்ற காங்கிரஸ், முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்ற காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்த உங்களை (திமுக) குறையே சொல்லவில்லையே.

இதையும் படிங்க: என்ன நடக்குது…கண்டிப்பா தட்டி கேட்கனும்‌‌..இயக்குனர் மோகன் ஜி கொந்தளிப்பு.!

எனவே, தமிழகத்தில் பாஜக கூட்டணி பற்றி அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அது குறித்து நான் கருத்து சொல்ல மாட்டேன்” எனக் கூறியுள்ளார். சமீபத்தில், அண்ணாமலையின் பேச்சும் அதிமுக உடன் இசைந்து போவது போன்றே உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறிவரும் நிலையில், எச்.ராஜாவின் கருத்து கவனம் பெற்றுள்ளது.

Hariharasudhan R

Recent Posts

கேமியோ ரோலில் பிரபல தெலுங்கு நடிகர்..”ஜெயிலர் 2″ சம்பவம் லோடிங்.!

நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…

11 minutes ago

“WHAT BRO”நான் குல்லா போடுற ஆள் இல்லை..மேடையில் விஜயை தாக்கிய பிரபலம்.!

வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…

1 hour ago

மருமகள், பேத்தியையும் விட்டுவைக்கவில்லை.. மாமியாருடன் சேர்ந்து செய்த பகீர் காரியம்!

கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…

2 hours ago

சர்ப்ரைஸ்.! ‘குட் பேட் அக்லி’ பட ரிலீஸில் ட்விஸ்ட்…தமிழில் இதுவே முதல்முறை.!

தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…

2 hours ago

எங்களுக்கு எந்த நிலத்தகராறும் இல்லை.. பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த செளந்தர்யா கணவர்!

சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…

2 hours ago

மரண மாஸ்.!மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் ரஜினிகாந்த்.!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி! நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர்-2 திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக…

3 hours ago

This website uses cookies.