தமிழகம்

விஜய்க்கு ஒரு கேள்வி.. கடுப்பான எச்.ராஜா!

விஜயின் குழந்தைகள் மாநகராட்சிப் பள்ளிகளிலா படிக்கிறது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.

கோயம்புத்தூர்: கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில், மத்திய பட்ஜெட் 2025 விளக்க பொதுக் கூட்டம், சுந்தரபுரம் சங்கம் வீதியில் நடைபெற்றது. இதற்கு, பாஜக தெற்கு மாவட்டத் தலைவர் ஆர்.சந்திரசேகர் தலைமை தாங்கினார். மேலும், இந்த பொதுக் கூட்டத்தில், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும், முன்னாள் மாவட்டத் தலைவர் கே.வசந்தராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, “மத்திய பட்ஜெட்டில் வீரத் தமிழச்சி நிர்மலா சீதாராமன் சிக்ஸர் அடித்து உள்ளார். விவசாயிகள் மற்றும் சிறு, குறு நிறுவனங்களுக்கு அதிகம் பட்ஜெட்டில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு மூன்று லட்சம் கோடி ரூபாய் இருந்த பயிர்க்கடனை, ஐந்து லட்சம் கோடி ரூபாய் வரை உயர்த்தியுள்ளது மத்திய அரசு. தமிழகத்தில் பொழுது போகவில்லை என்பதால், மொழிப் பிரச்னையை முதலமைச்சர் ஸ்டாலின் கையில் தூக்கி பேசிக் கொண்டு இருக்கிறார்.

இது போன்று பேசுவதற்கு தமிழக முதலமைச்சருக்கு வெட்கம் இருக்காதா? இந்தி உங்களுக்கு பிரச்னையாக இருந்தால், உங்கள் சன் சைன் பள்ளியில் மாணவர்களுக்கு இந்தி சொல்லித் தரக்கூடாது. முதலில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

1 முதல் 8 வரையில் உள்ள மாணவர்களை மாற்றுவதற்கு முடியவில்லை என்றால், எதற்கக அமைச்சராக இருக்க வேண்டும்? நீங்கள் நடத்தும் பள்ளியில் இந்தி இருக்கலாம், ஆனால், ஏன் அரசுப் பள்ளியில் இந்தி இருக்கக் கூடாது? ஆனைமலையாறு – நல்லாறு திட்டம் நீண்ட நாளாக கிடப்பில் உள்ளது.

கேரளா சென்ற முதலமைச்சர், ஏன் இதைப் பற்றி பேசவில்லை? அதேபோல், கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதியில் 20 ஆயிரம் வீடுகள் உள்ளன. அந்தப் பகுதி மக்கள் வெளியே வர முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. அந்த குப்பைக் கிடங்கால், நுரையீரல் தொற்று, மார்பக புற்றுநோய் போன்ற வியாதிகளால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: இறங்க மறுக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

ஏப்ரல் முதல் கோவை மாநகராட்சிக்கு இப்பகுதி மக்கள் யாரும் வரி கொடுக்க மாட்டார்கள். தவெக தலைவர் விஜய் பிள்ளைகள் எங்கு படிக்கிறது? சமச்சீர் பள்ளியிலா? மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை மட்டும் வேறு மொழி படிக்காதே என்கிறார்கள்.

இருமொழிக் கொள்கையை ஆதரிப்பவர்கள், நாளை காலை அவர்களது குழந்தைகளை மாநகராட்சிப் பள்ளியில் சேருங்கள். எந்த மாநிலத்திலும் மும்மொழிக் கொள்கைக்கு தடையில்லை. விஜய் குழந்தை, ஸ்டாலின், கனிமொழி ஆகியோரின் குழந்தைகள் வெளிநாட்டில் படித்துக் கொண்டு உள்ளனர். அவர்களை, இங்கு கொண்டு வந்து மாநகராட்சிப் பள்ளியில் படிக்க வையுங்கள்” எனக் கூறினார்.

Hariharasudhan R

Recent Posts

சூர்யாவை பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- பொதுமேடையில் விஜய்யை வம்பிழுத்த பிரபலம்!

கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

17 hours ago

ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…

கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…

19 hours ago

அதிகமான பாஜக எம்எல்ஏக்கள் இந்த முறை சட்டமன்றம் செல்வோம் : வானதி சீனிவாசன் உறுதி!

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…

19 hours ago

நீங்க பேசாம சிம்புவை கல்யாணம் பண்ணிக்கோங்க… திரிஷாவுக்கு வந்த திடீர் கோரிக்கை!

நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…

19 hours ago

விஜய் ஆபாச பட நடிகர்.. அவர் தந்தை ஆபாச பட இயக்குநர்.. குடும்பமே : சர்ச்சையை கிளப்பிய திமுக பேச்சாளர்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…

20 hours ago

போலீஸ் ரைடுக்கு பயந்து தப்பியோடிய அஜித் பட நடிகரை வளைத்து பிடித்த போலீஸார்! விசாரணை கெடுபிடி…

ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…

20 hours ago

This website uses cookies.