திருச்சி : லாவண்யா விவகாரம் தமிழகத்தில் நீதி விசாரணை நேர்மையாக நடக்காது எனவே. சிபிஐக்கு மாற்றியதை வரவேற்கிறேன் என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
திருச்சியில் பயங்கரவாத எதிர்ப்பு நாளாக உறுதியேற்போம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மறைந்த மருத்துவர் ஸ்ரீதர் புகைப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எச்.ராஜா, தமிழகம் பயங்கரவாத சக்திகளின் கூடாரமாக இருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் உள்ள ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகளை படுகொலை செய்வதற்கான திட்டங்கள் இங்கு தான் தீட்டப்படுகின்றன. எனவே, தமிழகம் அமைதிப் பூங்கா என்று சொல்வதை ஏற்க முடியாது.
பிரிவினைவாத சக்திகளை ஊக்குவிக்கும் வகையில் ‘ஒன்றிய அரசு’ என்று கூறும், சென்னையில் உயர் பதவியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரியை கடுமையாக எச்சரிக்கிறேன். அவர், மத்திய அரசு அதிகாரி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்களை மற்ற மாநிலங்களுக்கு மாற்றினால் அங்கு போய் இப்படி சொல்வாரா. அவர் முதுகெலும்பில்லாத அதிகாரி.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமே பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. மத்தியில் அதிமுகவுடனான கூட்டணி தொடர்கிறது. இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை.
அரியலூர் மாணவி வழக்கை, சிபிஐ விசாரணைக்கு மாற்றியது, நீதிபதியின் பரந்த ஞானத்தை காட்டுகிறது. தமிழகத்தில் நீதி விசாரணை நேர்மையாக நடக்காது என்பதை அவர் நன்கு அறிந்திருக்கிறார் என தெரிவித்தார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.