தவெக மாநாட்டுக்குச் சென்ற தனது மகனை கண்டுபிடித்து தருமாறு அவரது தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த புஷ்பநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் (Madras High Court) ஆட்கொணர்வு மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “கடந்த அக்டோபர் 27ஆம் தேதி அன்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு எனது மகன் மேகநாதன் சென்றார்.
ஆனால், அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. எனவே, மாயமான எனது மகனை கண்டுபிடித்துக் கொடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார். இந்த நிலையில், இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (டிச.10) விசாரணைக்கு வந்தது.
அப்போது போலீசார் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், “மாயமான மனுதாரரின் மகனை சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது” எனக் கூறினார்.
அது மட்டுமல்லாமல், இந்த விசாரணை தொடர்பான நிலை அறிக்கையையும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாக்கல் செய்தார். தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர். இந்த வழக்கு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மனைவியின் விபரீத ஆசை.. கணவன் கண்முன்னே சிதைந்து போன குடும்பம்!
முன்னதாக, கடந்த அக்டோபர் 27ஆம் தேதி, நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு (TVK Maanaadu) விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை என்னும் கிராமத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சுமர் 8 லட்சம் பேர் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
This website uses cookies.