சிவாஜி உயிரோடு இருந்திருந்தால் செவாலியர் பட்டத்தை மோடியிடம் கொடுத்திருப்பார்.. முத்தரசன் கடும் விமர்சனம்..!!!
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரச்சாரம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்தநிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில், கரூர் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், இந்த தேர்தல் பாசிசத்திற்கு எதிரான தேர்தல், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பதற்கான தேர்தல், அரசியலமைப்பு சட்டம் காக்கப்பட வேண்டும் என்பதற்கான தேர்தல், அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கி தந்துள்ள அமைப்புகள் காக்கப்பட வேண்டும் என்பதற்கான தேர்தல்,
10 ஆண்டுகளாக பேசாத மோடி இப்போ ஏன் பேசுகிறார். 2 கோடி வேலைவாய்ப்பு என்ன ஆச்சு என்று கேட்டால் கச்சத்தீவு என்கிறார். 15 லட்சம் ரூபாய் என்ன ஆச்சு என கேட்டால் கச்சத்தீவு என்கிறார்.
வெள்ள நிவாரண நிதி எங்கே என கேட்டால் கச்சத்தீவு என்கிறார். இது போல ஒரு பிரதமரை பார்த்ததில்லை என தெரிவித்தார். பல பிரதமர்களை பார்த்துள்ளோம். ஆனால் இப்படி பொய் பேசும் பிரதமரை பார்த்தில்லை.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால் செவாலியர் என்ற பட்டத்தை திருப்பி கொடுத்திருப்பார். வேறு யாருக்கு கொடுக்கலாம் என கேட்டிருந்தால் என்னையை விட சிறப்பாக மோடி நடிக்கிறார் அவருக்கு கொடுத்து விடுங்கள் என கூறியிருப்பார். நானாவது படத்தில் நடிக்கிறேன். ஆனால் மோடி நிஜத்திலும் நடிப்பதாக கூறியிருப்பார் என முத்தரசன் தெரிவித்தார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.