Categories: தமிழகம்

கைத்துப்பாக்கியால் கைவிலங்கு.. பிரபல ரவுடியால் சிக்கிய பாஜக நிர்வாகி மீது குண்டர் சட்டம்!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் சத்யா என்கிற சீர்காழி சத்யா (41). இவர் பிரபல ரவுடியாக உள்ளார்.

இவர் மீது கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழிப்பறி திருட்டு பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் தான் சீர்காழி சத்யா பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

இதற்கிடையே சீர்காழி சத்யாவை போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வந்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் தான் கடந்த மாதம் 28 ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் வழக்கறிஞர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவருடைய கூட்டாளிகளான மாரிமுத்து, பால்பாண்டி ஆகியோரும் சிக்கினர். இதையடுத்து அவர்களின் கார், வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சீர்காழி சத்யா வைத்திருந்த கைத்துப்பாக்கி, 5 தோட்டாக்கள், பட்டா கத்தி உள்ளிட்டவை சிக்கின. இதையடுத்து கைத்துப்பாக்கி பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த கைத்துப்பாக்கியை பாஜகவை சேர்ந்த நிர்வாகி சீர்காழி சத்யாவிற்கு கொடுத்தது தெரியவந்தது.

அதாவது பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளராக இருப்பவர் அலெக்ஸிஸ் சுதாகர். இவர் தான் சீர்காழி சத்யாவிற்கு துப்பாக்கியை சட்டவிரோதமாக வழங்கியது தெரியவந்தது.

இதையடுத்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஜக நிர்வாகியான அலெக்ஸிஸ் சுதாகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தான் தற்போது அலெக்ஸிஸ் சுதாகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

அதாவது அலெக்ஸிஸ் சுதாகர் மீது ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய செங்கல்பட்டு எஸ்பி பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை செங்கல்பட்டு கலெக்டர் ஏற்றார்.

இதையடுத்து அலெக்ஸிஸ் சுதாகரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து அலெக்ஸிஸ் சுதாகர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இதன்மூலம் பாஜக நிர்வாகி அலெக்ஸிஸ் சுதாகருக்கு ஓராண்டு ஜாமீன் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விஜய் முதல்ல ’அத’ பண்ணட்டும்.. விஷால் ட்விஸ்ட் பேச்சு!

நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…

39 minutes ago

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

12 hours ago

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

13 hours ago

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

13 hours ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

14 hours ago

’அதற்கு நான் காரணமல்ல’.. ராஷ்மிகா வரிசையில் பிரபல நடிகை!

தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…

14 hours ago

This website uses cookies.