கரூரில் வேலை கிடைக்காத விரக்தி மாற்றுத்திறனாளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென்று பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த ஆதனூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி செந்தில் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திடீரென்று பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது, பணியில் இருந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பெட்ரோல் பாட்டிலை பிடுங்கி எரிந்து அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
தாய், தந்தை இல்லாமல், திருமணமும் ஆகாமல் ஆதரவற்ற நிலையில் உள்ள சூழ்நிலையில், பல ஆண்டுகளாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருந்தும், இதுவரை வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
அரசு மற்றும் தனியார் துறை சார்பாக நடத்தப்பட்ட பல்வேறு பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பல சான்றிதழ்கள் பெற்று வேலைவாய்ப்புக்கு விண்ணப்பித்தும், இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…
வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…
அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…
மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…
This website uses cookies.