திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே மாவூத்தன்பட்டியில் மாற்றுத்திறனாளியை அடித்து சித்திரவதை, செய்யும் கொடூர பெண் குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா, கொடைரோடு அருகே அமையநாயக்கனூர் பேருராட்சியின் 10வது வார்டு பகுதி, மாவூத்தன் பட்டியாகும். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா, இவரது கணவரின் அண்ணன் மகன், மணிகண்டன் என்பவர் மாற்றுத்திறனாளி. 35 வயது மதிக்கத்தக்க, மாற்று திறனாளி மணிகண்டனால் பேசமுடியாது. நடக்க முடியாது.
காப்பகத்தில் பாதுகாப்பாக இருந்த மணிகண்டனை அழைத்து வந்த சந்திரா, அவர் வாங்கும் மாதந்திர உதவித் தொகைக்காகவும், மணிகண்டன் பெயரில் உள்ள காலி இடத்தை அபகரிக்கவும், திட்டமிட்ட சந்திரா மணிகண்டனை தினந்தோறும், குச்சியால் அடித்து சித்திரவதை செய்து வருகின்றார்.
இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த இந்து முன்னனி இளைஞர்கள், இந்த சம்பவம் தொடர்பாக அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு, வீடியோவுடன் தகவல் கொடுத்துள்ளனர். மேலும் இந்த வீடியோ வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடைரோடு அருகே மாவூத்தன்பட்டியில் மாற்றுத்திறளாளியை அடித்து சித்திரவதை செய்யும் கொடூர பெண் குறித்த வீடியோ வெளியானது, குறித்து இப்பகுதியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மனிதநேயம் மரத்து போனதற்கு இந்த நிகழ்வு சாட்சியாக உள்ளது. இது குறித்து அம்மையநாயக்கனூர் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விட்றாதீங்கண்ணா, ஃபைட் (Fight) பண்ணிட்டே இருங்கண்ணா, ஸ்ட்ராங்கா (Strong) இருங்கண்ணா என சீமானுக்கு அண்ணாமலை தைரியம் கூறியுள்ளார். சென்னை: பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 12) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 45 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 65…
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…
காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…
டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…
This website uses cookies.