கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இளைஞர், விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காததால், காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி, தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பழமலைநாதர் பகுதியை சேர்ந்தவர் ஜமால் மைதீன் மகன் அசாருதீன். திருமணமான இவர் டாட்டா ஏஸ் வாகனத்தின் மூலம் பழ வியாபாரம் செய்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் ஜெகன் பாபுவிடம், கடந்த ஜூன் மாதம் ஐந்து பைசா வட்டியென, 70 ஆயிரம் ரூபாய் பணம் கடனாக வாங்கியுள்ளார்.
பணம் வாங்கிய பிறகு நாள் ஒன்றுக்கு 700 ரூபாய் வட்டி என மாதம் 21,000 தர வேண்டும் என, வட்டிக்கு பணம் கொடுத்த ஜெகன் பாபு கூறியதாக சொல்லப்படுகிறது.
அதனால் பழ வியாபாரம் செய்யக்கூடிய, அசாருதீன் மாதம் 21,000 என கடந்த நான்கு மாதங்களாக கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் 50,000 ஆயிரம் அசல் மற்றும் 15000 வட்டி என 65 ஆயிரம் ரூபாய் உடனடியாக, தர வேண்டும் என ஜெகன் பாபு கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனால் இரண்டு மாதம் கால அவகாசம் தருமாறு அசாருதீன் கேட்டுள்ளார். ஆனால் வட்டிக்கு பணம் கொடுத்த ஜெகன் பாபு, காலதாமதமானதால், அசாருதீன் வியாபாரம் செய்து வந்த பழ வண்டியை, டாட்டா எஸ் வாகனத்துடன் எடுத்துச் சென்றுள்ளார்.
இதனால் வாழ்வாதாரத்தை இழந்த அசாருதீன் விருத்தாச்சலம் காவல் நிலையத்தில், ஜெகன் பாபு மீது கந்து வட்டி கொடுமை குறித்து நேற்று புகார் அளித்துள்ளார்.
ஆனால் விருத்தாச்சலம் காவல்துறையினர் புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த இளைஞர் அசாருதீன், காவல் நிலையம் எதிரே உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து, பெட்ரோல் வாங்கிக்கொண்டு, உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனைப் பார்த்த காவல்துறையினர் உடனடியாக அவரிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து, உடலில் தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். பின்னர் இச்சம்பவம் குறித்து விருத்தாச்சலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கந்து வட்டி கொடுமையால் பாதித்த இளைஞர், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், காவல் நிலையம் முன்பு, இளைஞர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.