Categories: தமிழகம்

அதிமுக ஆட்சியில் சொன்னதை மறந்துட்டீங்களா? இப்போ உங்க ஆட்சிதான் : முதலமைச்சருக்கு நினைவூட்டிய ஆர்பி உதயகுமார்!!

பொங்கலுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகளுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு கட்சியினருக்கு திருமண அழைப்பிதழ் வழங்கினார்.

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறும் போது, அதிமுக தலைமை கழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பூத் கமிட்டியில் தகுந்த நபர்களை நியமிக்க வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தல் வீயூகம் குறித்து பேசினார். நம்மை விட்டு பிரிந்தவர்கள் நம்மை விமர்சனம் செய்வதையே வேலையாக வைத்துள்ளார்கள். திராவிட முன்னேற்றக் கழக அரசின் மீது மிகப்பெரிய அதிருப்தி மக்களுக்கு உள்ளது.

தமிழர் என்று சொல்லி பொங்கலுக்கு கரும்புதர மறுக்கிறார்கள். கரும்பு விவசாயிகள் வேதனையோடு உள்ளனர். பொங்கலுக்கு ரூபாய் ஐயாயிரம் தர வேண்டும். சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு குறித்து அதிமுக பேரூர் வரை போராட்டம் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விரைவில் அதிமுக பொன் விழா மாநாடு நடைபெற உள்ளது. இந்த அரசுக்கு செங்கரும்பு கொடுக்க மனமில்லை. கரும்பில்லாத பொங்கல் திருநாள் இதுவே ஆகும்.

இந்த அரசுக்கு மக்களுக்கான அக்கறை இல்லை. மக்கள் என் அடையாள அட்டை வழங்கும் திட்டமானது முன்னாள் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த திட்டமாகும்.

எங்கள் ஆட்சியில்.பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்து கட்டணம் உயர்த்திய போது ஆம்னி பேருந்து முதலாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கட்டண நிர்ணயம் செய்தோம். ஆனால் திமுக அரசு தற்போது பேருந்து கட்டணம் உயர்ந்த போது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது வேதனை தருகிறது

இந்த அரசு செங்கரும்பும் கொள்முதல் செய்யவில்லை, விவசாயிகளிடமிருந்து மண்டை வெல்லமும் கொள்முதல் செய்யவில்லை என்று தெரிவித்தார்.

பாஜக கூட்டணி குறித்து கேள்விக்கு பதில் அளிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து முடிவு செய்வார்.

கடந்த காலங்களில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது பொங்களுக்கு ரூபாய் 5000 வழங்க வேண்டும் என்று கூறியதை மறந்து தற்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரூபாய் 1000 வழங்குவதாக அறிவித்துள்ளார். இதற்கு வரும் தேர்தலில் மக்கள் பதில் சொல்வார்கள் என்று கூறினார்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…

6 hours ago

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

7 hours ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

7 hours ago

கட்டுனா மாமனை மட்டும் தான் கட்டுவேன் : ஒரே மேடையில் இரு பெண்களுடன் இளைஞர் திருமணம்..(வீடியோ)!

தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…

8 hours ago

அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?

அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

8 hours ago

திருமாவுடன் கைக்கோர்க்கும் ராமதாஸ்.. 14 ஆண்டுகளுக்கு பின் மனமாற்றம் : ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…

8 hours ago

This website uses cookies.