கோவை ; கோவை புறநகர் பகுதியான கருமத்தம்பட்டியில் நொய்யல் ஆற்றில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதை நகராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சூலூரை அடுத்துள்ள கோவை, திருப்பூர் நடுவே அமைந்துள்ள எல்லைப் பகுதியில் நொய்யல் ஆறு பாய்ந்தோடுகிறது. கருமத்தம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட நொய்யல் ஆற்றின் அருகே கோழி, ஆடு, மாடு மற்றும் மீன் இறைச்சி போன்ற கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.
இதில் கருமத்தம்பட்டி நகராட்சி பகுதியான சோமனூர் பேருந்து நிலையத்தில் அருகில் காய்கறி சந்தையான புதன் கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு கூட்டம் அலைமோதி வருகின்றது. இதையடுத்து, இறைச்சி மற்றும் காய்கறி வியாபாரிகள் தங்களது வியாபாரம் முடிந்த பின்பு, அனைத்து கழிவுகளையும் நொய்யல் ஆறு மற்றும் ஊஞ்சபாளையம் சாலை ரயில்வே பாலத்தின் முன்பும் கொட்டி விட்டு செல்கின்றனர்.
இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவது மட்டுமில்லாமல், ஈ, கொசுக்கள், பூச்சி, புழுக்கள் அதிகம் பரவி, டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாய சூழ்நிலை ஏற்பட்டு வருகின்றது.
இதனை உடனே தடுத்து நிறுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும். இதில், நகராட்சி நிர்வாகம், ‘எச்சரிக்கை கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது,’ என்று விளம்பர பலகை அப்பகுதியில் வைத்திருக்கின்றனர். கண்காணிப்பு கேமரா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…
This website uses cookies.