Categories: தமிழகம்

தடுப்பூசி போடுவதால் ஒமிக்ரான் பாதிப்பில் இருந்து தப்பலாம்? சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்!!

விழுப்புரம் : ஞாயிற்று கிழமை மற்றும் இரவு நேர ஊரடங்கின் கட்டுபாடுகளால் நோய் தொற்று பாதிப்பு பன்மடங்கு அதிகரிப்பில் இருந்து குறைந்துள்ளதாக சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தை அடுத்த முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் தமிழக சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் கொரனோ மற்றும் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் சிகச்சைகள் முறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சுகாதார துறை செயலர் முன்னிலையில் கொரோனா தடுப்பு செலுத்தும் மையத்தில் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி கொண்டார்

.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் ஞாயிற்று கிழமைகள் மற்றும் இரவு நேர ஊரடங்கின் கட்டுபாடுகளால் பன்மடங்கு அதிகரிப்பில் இருந்து குறைந்துள்ளதாகவும், வரக்கூடிய
இரண்டு வாரங்கள் மிக முக்கியமானது என்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் போதும் கட்டாயம் அனைவரும் முகம்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது,சானிடைசர் போன்றவை பயன்படுத்துவது போன்றவைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கோவிட் பாதிப்பில் அதிக நுரையீரல் தொற்றால் உயிரிழப்பு இருந்த நிலையில் மூன்றாவது அலையான உருமாறிய ஒமைக்ரான் பாதிப்பில் தடுப்பூசி செலுத்து கொள்வதால் நுரையீரல் பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக கூறினார்.

அதனை தொடர்ந்து பேசிய ராதாகிருஷ்ணன் மூன்றாவது அலையில் அனைத்து வகையான நோய்களுக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் முதல் தவனை தடுப்பூசி 89.68 சதவிகிதமும், இரண்டாவது தவனை தடுப்பூசியை 66.95 சதவிகிதம் பேர் போட்டுகொண்டுள்ளதாகவும், 98.3 லட்சம் பேர் இரண்டாம் தவனை தடுப்பூசியை போட்டுக்கொள்ளாமல் உள்ளதால் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.

மேலும் பலபேர் ஒரு சடங்குக்காகவே மாஸ்க் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டிய அவர் கொரனோ நோய் பாதிப்புக்குள்ளான  2 லட்சம் பேர் மருத்துவக் கண்காணிப்பில் வீட்டிலிருந்தே சிகிச்சைப் பெற்று வருவதாகவும், திருமணங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அரசு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் நோய்த்தொற்றை குறைக்கலாம் என கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

27 minutes ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

28 minutes ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

2 hours ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

2 hours ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

2 hours ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

2 hours ago

This website uses cookies.