இந்தியாவையே உலுக்கிய வயநாட்டு நிலச்சரிவு சம்பவத்தில் பல தன்னார்வ அமைப்புகள் தற்போது உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்
இந்நிலையில் உறவுகளையும் உடைமைகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவி கரம் நீட்டும் வண்ணமாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறர் நலன் நாடும் தன்னார்வல அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், பெரியகுளம் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் பொதுமக்களிடம் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவி செய்யும் வண்ணமாக சிறியவர்கள் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உதவும் வண்ணம் ஆடைகள், அரிசி, பிஸ்கட், காய்கறிகள் மற்றும் போர்வை, துண்டு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை திரட்டி வருகின்றனர்.
மேலும் பேருந்தில் செல்லும் பயணிகளிடமும், சாலையில் நடந்து செல்லும் மக்களிடமும், பேருந்துக்காக காத்திருக்கும் பொது மக்களிடமும் கேரளா வயநாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக கொளுத்தும் வெயிலில் பொதுமக்களிடம் கையேந்தி நிவாரண பொருட்களை வழங்கிட கூறி நிதி திரட்டி வருகின்றனர்.
மேலும் திரட்டப்படும் பொருட்கள் மற்றும் நிதியை நாளை வயநாட்டில் உள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு துறை அதிகாரிகளிடம் வழங்கி பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க உள்ளதாக நிதி திரட்டி வரும் பிறர் நலன் நாடும் தன்னார்வல இளைஞர்கள் தெரிவித்தனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.