தமிழகம்

வெப்ப அலை மாநில பேரிடராக அறிவிப்பு!

வெப்ப அலை வீச்சை மாநில பேரிடராக அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

சென்னை: தமிழ்நாடு மாநில பேரிடர் நிவாரண நிதி விதிமுறைகளின்படி, வெப்ப அலை பாதிப்புக்கு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவும், உரிய நிவாரணங்கள் வழங்கவும், வெப்ப அலை வீச்சை மாநிலம் சார்ந்த பேரிடராக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதன்படி, வெப்ப அலையால் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்த அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஜூனில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், மாறி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக, தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் பெரும்பான்மையான இடங்களில் கடுமையான வெப்பமும், வெப்ப அலை வீச்சும் நிலவியது. வெப்ப அலையில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க பொது இடங்களில் தண்ணீர் பந்தல் அமைப்பது, ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் வழங்குவது, திறந்தவெளியில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி பணி நேரத்தை மாற்றி அமைப்பது, வெப்ப அலை காரணமாக ஏற்படும் உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் தனிப்பிரிவு அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கேரளா கோயில் திருவிழாவில் பயங்கர தீ விபத்து; 150க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

13 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

14 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

14 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

14 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

14 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

14 hours ago

This website uses cookies.