திருச்சிக்கு வந்த ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்படும் என தகவல் பரவியதால் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு அளித்தனர்.
தஞ்சை மாவட்டம், திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச ரத்தின கீர்த்தனை நாளை காலை நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 5.45 மணியளவில் திருச்சி வந்தார்.
அவரை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
தொடர்ந்து விமான நிலையத்தில் நேரம் ஓய்வெடுத்த பின்னர் கவர்னர் காரில், தஞ்சை புறப்பட்டு சென்றார். நேற்று சட்டசபையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இன்று திருச்சி வரும் ஆளுநருக்கு தமிழ் அமைப்பினர் கருப்புக்கொடி காட்டிய எதிர்ப்பு தெரிவிக்க இருப்பதாக ஏற்பட்ட தகவலால் கவர்னர் வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தை சுற்றிலும் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் தலைமையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.
மேலும், விமான நிலையத்திலிருந்து இருந்து தஞ்சை வரை பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டடுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.