திருப்பூர் : அங்கன்வாடியில் மழை நீர் ஒழுகும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள ராமியாம் பாளையத்தில் உள்ள அங்கன்வாடியில் மழைநீர் ஒழுகும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராமியாபாளையத்தில் உள்ள அங்கன்வாடியில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கலந்து சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் மழை பெய்து வரும் பொழுது அங்கன்வாடியில் தூங்கும் குழந்தைகள் அருகே மழை ஒழுகும் காட்சியை குழந்தைகளின் பெற்றோர் ஒருவர் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
தற்பொழுது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ராமியாபாளையம் அங்கன்வாடி கட்டிடம் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதை இதுவரை புனரமைக்கவில்லை.
மேலும் 50 ஆண்டுகளாக அங்கன்வாடி மையத்தில் மின்சாரம் இன்றி உள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழை நீர் ஒழுகும் இடத்தை சரி செய்து தர வேண்டும் மேலும் அங்கன்வாடிக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.