திருப்பூர் : அங்கன்வாடியில் மழை நீர் ஒழுகும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள ராமியாம் பாளையத்தில் உள்ள அங்கன்வாடியில் மழைநீர் ஒழுகும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராமியாபாளையத்தில் உள்ள அங்கன்வாடியில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கலந்து சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் மழை பெய்து வரும் பொழுது அங்கன்வாடியில் தூங்கும் குழந்தைகள் அருகே மழை ஒழுகும் காட்சியை குழந்தைகளின் பெற்றோர் ஒருவர் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
தற்பொழுது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ராமியாபாளையம் அங்கன்வாடி கட்டிடம் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதை இதுவரை புனரமைக்கவில்லை.
மேலும் 50 ஆண்டுகளாக அங்கன்வாடி மையத்தில் மின்சாரம் இன்றி உள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழை நீர் ஒழுகும் இடத்தை சரி செய்து தர வேண்டும் மேலும் அங்கன்வாடிக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
This website uses cookies.