தமிழகம்

மிதக்கும் செங்கோட்டை.. நெல்லை, தென்காசியில் சூழ்ந்த மழைநீர்.. மக்கள் கடும் அவதி!

திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நேற்று முதல் இடைவிடாது மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

திருநெல்வேலி: வங்கக் கடலில் நிலை கொண்டு உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் கடந்த இரண்டு நாட்களாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.

அந்த வகையில், நேற்று முழுவதும் நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, குற்றாலத்தின் (Courtallam Falls flood) அனைத்து அருவிகளிலும் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் நெல்லை (Nellai Rain) மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 242 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. அதேபோல், அம்பாசமுத்திரம் – 61.40 மி.மீ, சேரன்மகாதேவி- 55 மி.மீ, மணிமுத்தாறு- 45.20 மி.மீ, நாங்குநேரி- 24 மி.மீ, பாளையங்கோட்டை- 14 மி.மீ, பாபநாசம்- 20 மி.மீ, ராதாபுரம்- 7.40 மி.மீ மற்றும் திருநெல்வேலியில் 15 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது.

இந்த நிலையில், மாஞ்சோலை எஸ்டேட் (Manjolai Estate) ஊத்துமலையில் 500 மி,மீ அளவு மழை பதிவாகி உள்ளது. அதேபோல், நெல்லை மாநகரின் முக்கியப் பகுதிகளான ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், நெல்லை டவுன் சந்திப்பு ஆகிய இடங்களிலும் கனமழையால் வெள்ள நீர் தேங்கி காணப்படுகிறது.

செங்கோட்டையில் மழை வெள்ளம்: மேலும், தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் (Tenkasi Sengottai Rain) 24 செமீ மழை பதிவான நிலையில், குளக்கரையின் ஒரு பகுதி உடைந்ததால் நகரின் மையப் பகுதியில் வெள்ள நீர் கழுத்தளவு செல்கிறது. குற்றாலம் பிரதான அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பாலம் உடைந்து வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த நிலையில், தென்காசி (Tenkasi Rain) – கொல்லம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், சங்கன்கோவில் சங்கரணார் கோவில் வளாகம் மற்றும் உட்புறத்தில் முழங்கால் அளவு தண்ணீர் உள்ளது. மேலும், நெல்லை தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அது மட்டுமல்லாமல், மணிமுத்தாறிலும் வெள்ளம் ஓடுகிறது. நெல்லையில் இருந்து மாஞ்சோலை எஸ்டேட் செல்லும் சாலையில் ராட்சத பாறையும் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடு சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

Hariharasudhan R

Recent Posts

சூர்யாவை பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- பொதுமேடையில் விஜய்யை வம்பிழுத்த பிரபலம்!

கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

1 day ago

ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…

கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…

1 day ago

அதிகமான பாஜக எம்எல்ஏக்கள் இந்த முறை சட்டமன்றம் செல்வோம் : வானதி சீனிவாசன் உறுதி!

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…

1 day ago

நீங்க பேசாம சிம்புவை கல்யாணம் பண்ணிக்கோங்க… திரிஷாவுக்கு வந்த திடீர் கோரிக்கை!

நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…

1 day ago

விஜய் ஆபாச பட நடிகர்.. அவர் தந்தை ஆபாச பட இயக்குநர்.. குடும்பமே : சர்ச்சையை கிளப்பிய திமுக பேச்சாளர்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…

1 day ago

போலீஸ் ரைடுக்கு பயந்து தப்பியோடிய அஜித் பட நடிகரை வளைத்து பிடித்த போலீஸார்! விசாரணை கெடுபிடி…

ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…

1 day ago

This website uses cookies.