Categories: தமிழகம்

அறுவடை நேரத்தில் கனமழை.. நீரில் மூழ்கிய 30 ஏக்கர் பயிர்கள் : நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய கோரிக்கை!!

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாரான நெல் பயிர்கள் மழைநீரில் சாய்ந்தன.

திருவாரூர் மாவட்டத்தில் மூன்று லட்சத்து 76 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மாவட்டம் முழுவதும் அறுவடை பணிகள் என்பது தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுவரை 500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 529 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப் பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்பொழுது வரை கனமழை என்பது பெய்து வருகிறது. இந்த நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெல் பயிர்கள் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மழை நீரில் அடியோடு சாய்ந்து உள்ளது.

கமலாபுரம், எருக்காட்டூர், கண்கொடுதவனிதம், கொட்டாரகுடி உள்ளிட்ட பகுதிகளில் நெல் பயிர்கள் மழை நீரில் முழுவதுமாக சாய்ந்து உள்ளன. இதனால் விவசாயிகள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில் தற்பொழுது அறுவடை நேரத்தில் மழை பெய்து பயிர்கள் அனைத்தும் மழைநீரில் சாய்ந்துள்ளது எங்களுடைய ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் பாதிக்கக் கூடிய விஷயமாக உள்ளது என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
உடனடியாக வேளாண்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் திருவாரூர் மாவட்டத்தில் திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திறந்த வெளியில் இருந்ததால் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக நெல் மூட்டைகள் அதிக அளவில் மழையில் நனைந்து உள்ளன.

அது மட்டுமன்றி விவசாயிகள் தாங்கள் விற்பனை செய்வதற்காக கொண்டுவந்து அடுக்கி வைத்துள்ள நெல் மூட்டைகளை அதிக அளவில் மழையில் நனைந்து உள்ளதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

ஆகையால் ஈரப்பதத்தை கணக்கிலெடுக்காமல் உடனடியாக விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

6 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

6 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

6 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

7 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

7 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

8 hours ago

This website uses cookies.