சென்னையில் நிருபர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறுகையில், பன்னீர்செல்வம் வகித்த அனைத்து பதவிகளுமே பணம் அதிகமாக புழக்கம் இருக்கும் பதவிகள். வீட்டுவசதி, கருவூலம், நிதி என அனைத்து துறைகளுமே கேட்டு வாங்கி கொண்டவர் தான் பன்னீர்செல்வம்.
உலக கோடீஸ்வரர் வரிசையில் இருப்பது போல பன்னீர்செல்வம் பணம் வைத்திருக்கிறார். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., திரைப்படம் போல வசூல்ராஜா பன்னீர்செல்வம். சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார். ஆனால், அந்த உத்தமனை நம்ப மக்கள் தயாராக இல்லை. வாயெல்லாம் பொய்.
பொய்யிலே பிறந்த புலவரை போல பொய்யிலே பிறந்தவர் பன்னீர்செல்வம். அவர் வசூல்ராஜா பன்னீர்செல்வம். அவர் கரைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர் போல, மக்களை நம்ப வைக்கிறார். ஆனால், அதனை நம்ப மக்கள் தயாராக இல்லை.
அ.தி.மு.க., ஆட்சியில் எந்த துறையிலும் ஊழல் குற்றச்சாட்டு வராத நிலையில், பன்னீர்செல்வம் வகித்த துறையில் மட்டும் ஊழல் புகார் வந்தது ஏன்? தொண்டர்கள், நிர்வாகிகள் செல்வாக்கு அவருக்கு கிடையாது.
ஊடகங்கள் மற்றும் தி.மு.க.,வை நம்பி அரசியல் செய்கிறார். துரோகம் செய்ததில் பன்னீர்செல்வம் கைதேர்ந்தவர். உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்பவர். கட்சியை காட்டிக் கொடுக்க தயங்காதவர்.
அ.தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீராக பராமரிக்கப்பட்டது. தற்போது தி.மு.க., ஆட்சியில் போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. பொது மக்களுக்கு பாதுகாப்பு கிடையாது. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி! நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர்-2 திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக…
தவெக தலைவர் விஜய்க்கு நாளை மறுநாளான மார்ச் 14ஆம் தேதி முதல் மத்திய அரசின் ஒய் (Y) பிரிவு பாதுகாப்பு…
தமிழகத்தில் பாஜக கூட்டணி பற்றி அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அது குறித்து நான் கருத்து சொல்ல மாட்டேன் என…
"கடின உழைப்பே என் இலக்கு" – ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் தனக்கென தனி இடத்தை…
மோகன் ஜி உருக்கமான பதிவு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் மலையின்பாதியை காணும்,இதையெல்லாம் கேட்க யார் வருவார் என தமிழ்…
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளியில்தான் படிக்கிறார், அதனால் அவருக்குத்தானே அறிவில்லை என்று அர்த்தம்…
This website uses cookies.