புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மயிலாடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. இவரை அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர் துரைக்கண்ணு (வயது 35) என்பவர் காதலித்துள்ளார்.
ஆனால் முறைதவறிய காதல் என்பவதால் அவரை திருமணம் செய்ய பவித்ரா விரும்பவில்லை. துரைக்கண்ணுவுக்கு பவித்ரா மகள் முறை வேண்டும்.
அத்துடன் துரைக்கண்ணுவைவிட பவித்ராவுக்கு 15 வயது குறைவு. தனது காதலை பவித்ரா ஏற்க மறுத்ததால் கடும் விரக்தியில் இருந்துள்ளார் துரைக்கண்ணு.
இந்நிலையில் இன்று பவித்ராவின் வீட்டுக்கு சென்ற துரைக்கண்ணு, தனியாக இருந்த பவித்ராவின் கழுத்தை அறுத்து கொலை செய்ததுடன், வீட்டுக்கு சென்று தானும் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
சூப்பர் ஸ்டார் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தை எவராவது நேரில் பார்த்தால் மரியாதை தானாக வரும் என்று…
This website uses cookies.