தமிழகம்

சபரிமலை 18 படியில் முதுகை காட்டிய போலீசார்.. மரபு மீறப்பட்டதா? கொதித்தெழும் பக்தர்கள்!

சபரிமலை ஐயப்பன் கோயில் 18 படியில் முதுகைக் காட்டியபடி குரூப் போட்டோ எடுத்த காவலர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.

பத்தனம்திட்டா: உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, தற்போது மாலை போட்டு, விரதம் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இவ்வாறு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள், சபரிமலை சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய 18 படி வழியாகச் சென்று தரிசனம் செய்வதை புனிதமாக கருதுகின்றனர்.

அதேநேரம், இருமுடி கட்டுடன் செல்லும் பக்தர்களுக்கு மட்டுமே 18 படிகள் வழியாகச் சென்று தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. அதேபோல், சபரிமலையின் மேல் சாந்தி மற்றும் பந்தளம் மன்னர் குடும்பத்தினருக்கு மட்டுமே உரித்தானது. இதில் விதிவிலக்குகள் உண்டு.

இதனிடையே, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் நிலையில், அவர்களை படிகளில் ஏற்றி விடுவதற்கான பணிகளை போலீசார் செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல், ஐயப்பனுக்கு பின்புறமாக முதுகைக் காட்டி நிற்கக் கூடாது என்ற மரபும் சபரிமலையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சபரிமலையில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் போலீசார், 12 நாட்களுக்கு ஒரு முறை மாற்றப்படுவது வழக்கம். அந்த வகையில், கோயில் நடை திறக்கப்பட்ட நவம்பர் 15ஆம் தேதி முதல் பணியாற்றிய முதல் குழுவினர் பணி முடிந்து திரும்பி உள்ளனர்.

இவ்வாறு தாங்கள் பணி முடிந்து செல்லும்போது கோயில் நடை சாத்தப்பட்டிருந்த பிற்பகல் நேரத்தில், படியில் நின்று கொண்டு ஐயப்பனுக்கு முதுகை காட்டியபடி குழுப் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இதையும் படிங்க: விஜய்யை டம்மியாக்கிய வெற்றி மாறன்… விடுதலை 2 ட்ரெய்லரில் அந்த வசனத்தை கவனிச்சீங்களா?!

போலீசாரின் இந்தச் செயலுக்கு ஆன்மீக அமைப்புகள், பக்தர்கள் தரப்பிலும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். மேலும், இவ்வாறு மரபு விதிமீறல்களில் ஈடுபட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் வைத்து உள்ளனர்.

இவ்வாறு இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேரள காவல்துறை கூடுதல் இயக்குனர் ஸ்ரீஜித், சபரிமலையில் பணியில் உள்ள எஸ்பி பைஜுவிற்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், பணி முடிந்து திரும்பி உள்ள போலீசாரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Hariharasudhan R

Recent Posts

திடீரென டிராக்கை மாற்றும் அஜித்.. டென்ஷனான GBU டீம்!

ஏப்ரலில் வெளியாகவுள்ள குட் பேட் அக்லி படம் மீது அஜித்குமார் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். சென்னை: மைத்ரி…

36 minutes ago

போராடும் ‘விடாமுயற்சி’…இறுதி கட்டத்தை நோக்கி படத்தின் வசூல்.!

தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…

12 hours ago

‘புஷ்பா’ ஒரு படமா…மாணவர்களின் நிலைமை கேள்விக்குறி…கொதித்தெழுந்த பள்ளி ஆசிரியர்.!

மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…

12 hours ago

பாகிஸ்.கேப்டன் செய்த பிரார்த்தனை…கிண்டல் அடித்த ரெய்னா..வைரலாகும் வீடியோ.!

பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…

13 hours ago

அரசியல் வசனங்களுடன் ஜனநாயகன்.. வெளியான மாஸ் அப்டேட்!

தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

14 hours ago

‘ஜெயலலிதா’ அம்மாவே சொல்லி இருக்காங்க..பிரபுதேவா நிகழ்ச்சியில் வடிவேல் பர பர பேச்சு.!

பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…

14 hours ago

This website uses cookies.