முதல்ல இந்தி கத்துக்கணும்… அப்பதான் தமிழை வளர்க்க முடியும் : முதலமைச்சர் ஸ்டாலினை சாடிய ஆளுநர் தமிழிசை!!
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஆளுநர் தமிழிசை அங்கே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தி உள்ளிட்ட எந்தவொரு மொழியையும் புதிதாக கற்றுக் கொள்வதில் தவறில்லை. இது நமக்கு உதவியாகவே இருக்கும். நாம் வட இந்தியாவில் தமிழை வளர்க்க வேண்டுமானால் நாம் முதலில் இந்தி கற்க வேண்டும்.
கம்பர் எப்படி வால்மீகியின் ‘ராமாயணத்தை’ படித்து, ‘கம்பராமாயணம்’ தமிழில் எழுதினாரோ.. அதேபோல நாம் பிற மொழிகளைக் கற்றுத் தமிழை வளர்க்க வேண்டும். திமுக அரசியல் நோக்கத்திற்காக மொழியைப் பயன்படுத்தியது, இப்போது இந்தியை நிராகரிப்பதால் என்ன பாதிப்பு ஏற்பட்டது என்ற பாடத்தை கற்றுள்ளனர்.
இந்தி கற்க வேண்டும் என நிதிஷ் குமாரின் ஏன் அட்வைஸ் செய்தார் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்போதாவது உணர்வார் என்று நம்புகிறேன். இந்தி கற்றுக்கொள்வது சிறப்பான ஒன்று. அதை ஸ்டாலின் புரிந்துகொள்வார் என்று நம்புகிறேன். ஏனென்றால் இப்போது அவரது கூட்டணி தலைவரே இதைச் சுட்டுக்காட்டியுள்ளார்.
ஆங்கிலம் ஒரு அந்நிய மொழி. அந்த அந்நிய மொழியை கற்பதற்குப் பதிலாக நாம் நமது நாட்டில் இருக்கும் ஒரு மொழியையே கற்றுக் கொள்ளலாமா.. இந்தி கற்காமல் இருந்ததால் தான் நம்மால் வலுவான ஒரு தலைவரை தேசியளவில் அனுப்ப முடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.