அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்த இந்து முன்னணியினர்… சிலையை பறிமுதல் செய்த போலீசார்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 September 2024, 5:59 pm

திருவள்ளூர் அடுத்த வேளகாபுரம் பகுதியில் போலீசாரிடம் உரிய அனுமதியின்றி இந்து முன்னணியினர் வைத்த விநாயகர் சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விநாயகர் சிலையை பறிமுதல் செய்ய விடாமல் இந்து முன்னணி தரப்பினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் போலீசார் அத்தகைய விநாயகர் சிலையை மீட்டு ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு வாகனத்தில் கொண்டு சென்றனர்.

விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே அப்பகுதியில் பிரச்சனை நிலவு வருவதாக கூறப்படுகிறது.

இதனால் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!