கரூரில் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக செயல்பட்டதாக இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்ட நிலையில், காவல் நிலையம் முன்பு கோஷமிட்டவர்களில் ஒருவரை போலீசார் அடித்து குண்டு கட்டாக காவல் நிலையத்தில் தூக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு ஜோதிடர் தெருவில் வசிப்பவர் சக்தி (32).
இந்து முன்னணி கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் வெங்கமேடு எம்.ஜி.ஆர் சிலை அருகில் இந்துக் கடைகளிலேயே பொருட்களை வாங்குவோம் என்றும், ஜவுளி ஆனாலும் சரி, மளிகை பொருட்கள் ஆனாலும் சரி, கம்ப்யூட்டர் முதல் கருவேப்பிலை வரை நாம் வாங்கும் பொருட்கள் இந்துக்கள் கடையிலேயே வாங்க வேண்டும், கடைகளில் இந்து சாமி படம் உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும் என்று மதப் பிரிவினை ஏற்படும் வகையில் நோட்டீஸ் ஒட்டி சமூக வலைத்தளங்களில் பரப்பினார்.
இது தொடர்பாக வழக்கு வெங்கமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் உதயகுமார் கொடுத்த புகாரின் பெயரில் இந்து முன்னணி கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி கைது செய்யப்பட்டார். அவரை வெள்ளியணை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் நேற்று இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.
அப்போது, இந்து முன்னணியினர் கோஷங்களை எழுப்பியதால் போலீசாருக்கும், இந்து முன்னணியினருக்கும் வாக்குவாதமும், தள்ளு முள்ளும் ஏற்பட்டது. அப்போது இந்து முன்னணியின் கரூர் நகர செயலாளர் வெற்றியை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தாக்கியும், அவரை குண்டு கட்டாக தூக்கி காவல் நிலையத்திற்குள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, வெங்கமேட்டில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்ததோடு, இனி தமிழகம் முழுவதும் அந்த துண்டு பிரசூரங்கள் விநியோகிக்கப்படும் என்றும் இந்து முன்னணி அறிவித்து இன்று முதல் நடைமுறைபடுத்தியுள்ளது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.