கன்னியாகுமரி அருகே இந்து தமிழர் கட்சி மாநில நிர்வாகியின் கார் மற்றும் வீட்டை கருங்கற்களால் உடைத்து சேதப்படுத்தும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியலை அடுத்த கள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் ஈசான சிவம். இந்து தமிழர் கட்சியின் மாநில நிர்வாகியாக இருந்து வருகிறார். நேற்று நள்ளிரவு அவரது வீட்டிற்கு இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த ஸ்கார்ப்பியோ காரை கருங்கற்களால் அடித்து நொறுக்கியதோடு, வீட்டின் கதவு மற்றும் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கி அங்கிருந்து தப்பியோடியது.
இதுகுறித்து ஈசான சிவன் இரணியல் காவல் நிலையத்தில் புகாரளித்த போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 மர்ம நபர்கள் அந்த கார் மற்றும் வீட்டை கற்காளால் எறிந்து அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.