Categories: தமிழகம்

மணப்பெண்ணுக்கு கிறிஸ்துவ பெயர்… இந்து கோவிலில் திருமணத்திற்கு அனுமதி மறுப்பு… திருமண ஆசையுடன் வந்த தம்பதிக்கு ஷாக்..!

தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் மணப்பெண்னின் பெயர் அந்தோணி திவ்யா என்று இருந்ததால், திருமணத்தை ஆலயத்தில் வைத்து திருமணம் நடத்த அதிகாரிகள் மற்றும் பூசாரிகள் மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகேயுள்ள பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணுச்சாமி. இவரது மகன் கண்ணன் என்பவருக்கும், தருவைகுளம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகள் அந்தோணி திவ்யா என்பவருக்கும் திருமணம் பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு, தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவிலில் உள்ள முருகன் சன்னதியில் வைத்து திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மணமக்களின் பெற்றோர்கள் தூத்துக்குடி பாகம் பிரியால் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் இன்று காலை 11 மணியளவில் திருமணம் செய்வதற்காக மணமக்கள் கோவிலுக்குள் சென்றனர். அப்போது, திருக்கோவில் அதிகாரிகள் மற்றும் பூசாரிகள் அந்தோணி திவ்யா என மணமகள் பெயர் உள்ளதால் கோவிலுக்குள் திருமணம் நடத்த அனுமதி இல்லை, என கூறினர்.

இதைத்தொடர்ந்து, பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயம் முன்பு உறவினர்கள் முன்னிலையில் மணமகன் கண்ணன் மற்றும் மணமகள் அந்தோணி திவ்யாக்கு திருமணம் நடைபெற்றது. உறவினர்கள் மலர் தூவி வாழ்த்து தெரிவித்தனர். இதை தொடர்ந்து, மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டனர். இது தொடர்ந்து மணமக்கள் மற்றும் உறவினர்கள் ஆலயத்துக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மணமக்கள் உறவினர்கள் கூறும்போது, அனைத்து ஆவணங்களையும் முறையாக சமர்ப்பித்தும் பெயரில் அந்தோணி என்ற கிறிஸ்தவ பெயர் மணமகள் பெயருக்கு முன்பாக இருந்ததால், தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனூரை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் வைத்து திருமணம் நடத்த அதிகாரிகள் மற்றும் பூசாரிகள் அனுமதி மறுத்துள்ள சம்பவம் கண்டனத்திற்குரியது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன், என தெரிவித்தனர்.

இதுகுறித்து சிவன் கோவில் நிர்வாக அதிகாரியிடம் கேட்டபோது, சிவன் கோவிலில் திருமணம் நடைபெற வேண்டுமென்றால், 10 தினங்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். மேலும், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இவர்கள் கொடுத்த ஆவணத்தில் மணமகள் பெயரில் கிறிஸ்துவ மதம் குறிப்பிட்டுள்ளதால், தாங்களால் திருமணம் செய்து வைக்க முடியாது, என அவர்கள் தெரிவித்தனர்.

மணமகள் பெயருக்கு முன்பாக கிறிஸ்தவ பெயர் இருந்ததால் மணமகன் மற்றும் மணமகளை திருமணம் செய்ய ஆலயத்திற்குள் அனுமதிக்காத சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

2 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

2 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

4 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

4 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

4 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

5 hours ago

This website uses cookies.